ECR பண்ணை வீட்டில் நடிகையுடன் ஜல்சா.. வடிவேலுவின் முகத்திரையை கிழித்த பிரபலம்..!

Author: Vignesh
5 July 2023, 1:30 pm
vadivelu-updatenews360 g
Quick Share

தமிழ் சினிமாவில் நடிகர் வடிவேலு காமெடி நடிகராக திகழ்ந்து வருகிறார். தற்போது மாமன்னன் படத்தில் முக்கிய ரோலில் நடித்து உள்ளார், சமீபத்தில் இந்த படத்தின் ராசா என்ற பாடல் வடிவேலு குரலில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்நிலையில், வடிவேலு பற்றிய சில தகவல்களை பயில்வான் ரங்கநாதன் பகிரங்கமாக பகிர்ந்துள்ளார்.

maamannan vadivelu-updatenews360

இதையடுத்து லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் வடிவேலு உடன் நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்து பல குற்றச்சாற்றுகளை பகிர்ந்து வருகின்றனர்.

நடிகர் வடிவேலு தான் தனக்கு ஜோடியாக நடிக்கும் சக நடிகையை தேர்வு செய்வாராம். அந்தவகையில் ராஜ் கிரணால் அறிமுகம் செய்யப்பட்ட வடிவேலு, முதலில் அனைவருக்கும் டி, காபி கொடுக்கும் நபராக இருந்துள்ளார். அதன்பின்னர், என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் அறிமுகமாகி தனது தனி திறமையால் முன்னுக்கு வந்துள்ளார் வடிவேலு. மேலும், சந்திரபாபு, நாகேஷ்க்கு அடுத்து நடனமாடத்தெரிந்தவர் வடிவேலு என்றும் பயில்வான் கூறியுள்ளார்.

vadivelu

முன்னதாக, வடிவேலு நட்சத்திர நடிகனானதுக்கு பின்னர், தனக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என்று இயக்குனரிடம் கேட்டு மற்றாங்கள் வரை அவரே பார்த்துக்கொள்வாராம். அந்த நடிகையை நடிக்கவைங்கன்னு இயக்குனருக்கே அறிவுரையும் வடிவேலு சொல்லுவாராம். இரு படங்களில் வாய்ப்பு கொடுத்த நடிகைக்கு வடிவேலு மீண்டும் வாய்ப்பு கொடுக்கமாட்டாராம். அப்படி சந்திரமுகி படத்தில் சொர்ணா மேத்யூஸ் என்பவரை நடிக்க வைத்தது வடிவேலு தான் என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.

Suvarna Mathew-updatenews360

மேலும், பல படங்களில் கவர்ச்சி நடனமாடிய நடிகை சோனாவை, குசேலன் படத்தில் நடிக்க வடிவேலுவே சிபாரிசு செய்ததாகவும், மேலும், நடிகை அம்பிகா மார்க்கெட் இல்லாத போது வடிவேலுவிடம் கெஞ்சி ஜோடியாக நடிக்க வாய்ப்பு கேட்டதாகவும், அந்த சமயத்தில் வடிவேலு அம்பிகாவுடன் அப்படி இப்படி இருக்க ஆசைப்பட்டு தான் வாய்ப்பு கொடுத்தாராம்.

ambika -updatenews360

இதேபோல் தான் கோவை சரளாவுக்கு வாய்ப்பு கொடுத்ததும் வடிவேலு தான். படத்தில் வடிவேலு மீது இருக்கும் தனிப்பட்ட பகையை சண்டை காட்சியில் காட்டியிருக்கிறார். அதன்பின் மின்னல் தீபா, எனக்கு வாய்ப்பு கொடுத்ததே வடிவேலு தான் என்று அவரே கூறியிருக்கிறார். இவரை கோவை சரளாவும் திருப்திப்படுத்தி உள்ளதாகவும், தற்போது வரை திருமணம் செய்யாமல் இருப்பதற்கு வடிவேலுவும் ஒரு முக்கிய காரணம் எனவும், இதைத்தொடர்ந்து மின்னல் தீபா, சொர்ணா போன்ற நடிகைகளையும் தனது படங்களில் வடிவேலு நடிக்க வைத்து, பின்பு அவர்களது கேரியரே சுத்தமாக போய்விட்டது என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.

kovaisarala -updatenews360

நடிகை ஸ்ரேயா சரண் வடிவேலுவுடன் கட்டிப்பிடித்து நடனமாட வைக்க பல லட்சம் சம்பளமாக வாங்கி இருந்தார். இந்த படத்தில் மும்தாஜ் தான் வேண்டும் என்று நடிக்க வைத்திருக்கிறார் வடிவேலு. சில நடிகைகளிடம் 8 மணிக்கு தன்னுடைய பண்ணை வீட்டுக்கு வடிவேலு கூட்டிச்சென்றும் இருக்கிறார் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

vadivelu - updatenews360

வாய்ப்பு தேடி வரும் பல நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளாராம். சில இயக்குனருக்கு சிபாரிசும் செய்து வடிவேலு உதவி இருக்கிறார். அதிலும் மார்க்கெட் இழந்த நடிகைகளுக்கு தன் படத்தில் கண்டீஷன் போட்டுத்தான் நடிக்க வைப்பாராம். அதிலும் வாய்ப்பு தேடி வரும் நடிகைகளுக்கு உதவி செய்யும் போது சில அட்ஜெஸ்ட்மெண்ட்களையும் நடிகைகளிடம் வடிவேலு எதிர்ப்பார்ப்பாராம்.

priya bhavani shankar

முன்னதாக ஸ்ரேயா சரண், பிரியா பவானி சங்கர், சதா, ஷிவானி உள்ளிட்ட நடிகைகள் இந்த லிஸ்ட்டில் இருப்பதாகவும் சினிமா விமர்சகர் வித்தகன் சேகர் மறைமுகமாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 333

1

3