இப்படி ஒரு மூடநம்பிக்கையா?.. வாயை விட்டு வாங்கி கட்டிக்கொள்ளும் CWC வெங்கடேஷ் பட்..!

Author: Vignesh
14 March 2024, 11:22 am
venkatesh bhat
Quick Share

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனவர் செஃப் வெங்கடேஷ் பட். சென்னையில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் படிப்பில் ஆர்வம் இல்லாமல் தொடர்ந்து அடுத்தடுத்து தேர்வில் தோல்வியடைந்தார்.

அதன் பின்னர் தனக்கு பிடித்த செஃப் தொழிலை கையில் எடுத்தார். தாஜ் ஹோட்டல், தி லீலா பேலஸ் உள்ளிட்ட பெரிய ஹோட்டல்களில் பணியாற்றி இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று புகழ் பெற்ற வெங்கடேஷ் பட் தற்போது ஒளிபரப்பாக உள்ள குக் வித் கோமாளி’ தொடரின் 5-வது சீசனில் தான் பங்கேற்வில்லை என கூறி அதிர்ச்சியளித்திருந்தார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில்,கடந்த சில மாதங்களாக பல்வேறு சமூக ஊடக தளங்களில், குக் வித் கோமாளி சீசன் 5 புதிய சீசன் தொடங்கும் என்றும், இந்த நிகழ்ச்சியில் நான் நடுவராக இருப்பேன் என செய்திகள் வெளியிட்டு வருகின்றன. மில்லியன் கணக்கான மக்களை மகிழ்ச்சியடையச் செய்த இந்த அற்புதமான நிகழ்ச்சியிலிருந்து நான் ஓய்வு எடுக்க போகிறேன். இந்த அற்புதமான நிகழ்ச்சியை உருவாக்கி செயல்படுத்திய எனது இயக்குனர் மற்றும் நிகழ்ச்சியாளர்கள் அனைவருக்கும் நன்றி.

இந்நிகழ்ச்சி பலரது மன அழுத்தத்தை குறைக்க கூடிய ஒரு நிகழ்ச்சியாக இருந்ததை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்படிப்பட்ட நிகழ்ச்சியில் இருந்து நான் விலகுவது, ஒரு கடினமான முடிவு தான். இருப்பினும் நான் அதில் உறுதியாக நிற்கிறேன். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்கள் அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். செஃப் வெங்கடேஷ் பட்டின் இந்த முடிவு குக் வித் கோமாளி ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இதையடுத்து குக் வித் கோமாளியின் இன்னொரு நடுவர் செஃப் தாமுவும் விலகிவிட்டதாக வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்தார்.

இதையடுத்து ஒரு புது நிகழ்ச்சியில் சந்திப்பதாக வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு ஆகிய இருவருமே வீடியோ வெளியிட்டு தெரிவித்து இருக்கின்றனர். இதனால் இவர்கள் இருவரும் விஜய் தொலைக்காட்சியை விட்டு வெளியேறி அதிக சம்பளம் பெற்றுக்கொண்டு சன் டிவியில் தான் புது ஷோ தொடங்க இருக்கிறார்களா என பலரும் கேள்வி எழுப்பினார்கள். ஆனால், அது உண்மையில்லை.

venkatesh bhat

ஆம், அவர்கள் இருவரும் விஜய் டிவியே தொடங்கும் புது சமையல் ஷோவை நடத்த உள்ளதாக பேசிக்கொள்கிறார்கள். அதற்கு ப்ரோமோஷன் செய்யும் வகையில் தான் குக் வித் கோமாளியில் இருந்து விலகிவிட்டதாக வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.அப்படி வெங்கேஷ் பட் தாமு இருவரும் புது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது யார்? என பெரிய கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில், வெங்கடேஷ் பட் சமீபத்தில் பேசிய வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையாகி உள்ளது. அதோடு அது மிகவும் வைரலாகி வருகின்றது. அப்படி என்ன அந்த வீடியோவில் பேசினார் என்றால், தான் பிள்ளை பிறந்த போது திருப்பதி சென்று பெருமாளை பார்த்த பிறகு குழந்தையை பார்ப்பேன் என்று வேண்டி இருந்தாராம். ஆனால், குழந்தை பிறந்த 10 நாளில் கோவிலுக்கு போகக்கூடாது என்பது எங்களது வழக்கம் அதனால் பத்து நாட்கள் குழந்தையை பார்க்கவில்லை என பேசி உள்ளார். இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து மூடநம்பிக்கையின் உச்சம் இதை பெருமையாக வேற நீங்க பேசுறீங்களா என்று கண்டித்து வருகின்றனர்.

Views: - 63

0

0