இன்னைக்கு வந்தவனெல்லாம் ஆடுறானுங்க… ரஜினி பற்றி பேசி உணர்ச்சிவசப்பட்ட வெங்கடேஷ் பட்!

Author: Shree
17 July 2023, 5:40 pm
Quick Share

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தற்போது 72 வயது ஆகிறது. இன்னுமும் ஸ்லிம் பிட் தோற்றத்தை வைத்து மாஸ் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு அடித்து எத்தனை இளம் நடிகர்கள் வந்தாலும் கனவில் கூட சூப்பர் ஸ்டார் இடத்தை நிரப்பவே முடியாது. தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ரஜினியின் தீவிர ரசிகனாக பேட்டி ஒன்றில் உணர்ச்சி வசப்பட்டு பேசிய செஃப் வெங்கடேஷ் பட் ” ரஜினி சார் மாதிரி ஒரு பொறுமைசாலியை நீங்கள் பார்க்கவே முடியாது. இன்னைக்கு வந்தவனெல்லாம் ஆடுறானுங்க. ஆனால், தலைவர் அப்போதிலிருந்து இப்போ வரைக்கும் அந்த simlicity’யை மெயின்டைன் செய்து வருகிறார். நடிப்பையும் தாண்டி வாழ்க்கை உள்ளது என்பதில் நம்பிக்கை கொண்ட ரஜினி. நடிப்பு மட்டுமே வாழ்க்கை என எப்போதும் மூழ்கியது கிடையாது.

கமல் – ரஜினி என கேட்டதற்கு? அய்யய்யோ ரஜினி – கமல்னு பேசுனீங்கனா நான் ரஜினியை விட்டுக்கொடுக்கமாட்டேன். நான் ரஜினி வெறியன் என ஓப்பனாகவே கூறினார். ரஜினிக்கு சிக்கன் ரொம்ப பிடிக்கும். ஆனால் அளவோடு சாப்பிடுவார். சூப்பர் ஸ்டார்னு சொல்லறீங்க , தலைவான்னு கூப்பிடுறீங்க ,பால் அபிஷேகம் பண்றீங்க, பேனர் அடிக்கிறீங்க, பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோன்னு உயிரை விடுறீங்க இப்படி பல விதங்களில் தன்னை தூக்கி வைத்து கொண்டாடினாலும் ரஜினி மிகவும் அமைதியாக தனது வேலைகளை மட்டும் செய்து வருகிறார் என ஒரு தீவிர ரசிகனாக வெறிக்கொண்டு பேசியுள்ளார் வெங்கடேஷ் பட்.

Views: - 260

1

0