ஓ… இதுதான் விஷயமா.. சமீப காலங்களில் செருப்பு அணிய மறுக்கும் விஜய் ஆண்டனி..!

Author: Vignesh
19 January 2024, 7:50 pm
vijay antony - updatenews360.png d
Quick Share

90 கிட்ஸ்களின் பேவரைட் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர், நடிகர், திரைப்பட ஆசிரியர், பாடலாசிரியர், ஆடியோ இன்ஜினியர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் இப்படி பன்முக திறமைகளை கொண்டிருக்கிறார். 2005 இல் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி பின்னர் 2014ல் வெளியான சலீம் படத்தில் ஹீரோவாக நடித்து அறிமுகம் ஆனார்.

அதன் பின்னர் 2016ம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்து மிகச்சிறந்த நடிகராக பெயர் வாங்கித்தந்தது. நாகர்கோவிலை சேர்ந்த இவர் பாத்திமா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு மீரா, லாரா என இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தனர்.

இப்படியான நேரத்தில் தான், கடந்த 19ம் தேதி மூத்த மகள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இந்த சம்பவம் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி மிகுந்த வேதனைக்குள்ளாகியது.

இந்நிலையில் அண்மையில் ரத்தம் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கான பிரமோஷனுக்கு பல தடைகளை தாண்டி விஜய் ஆண்டனி கலந்து கொண்டது மக்களால் வரவேற்கப்பட்டது. மேலும், படங்களை தாண்டி விஜய் ஆண்டனி இசை கச்சேரி நடத்துவதிலும் தற்போது ஆர்வம் காட்டி வருகிறார்.

vijay antony-updatenews360

இந்நிலையில், மகளின் இறப்பிற்கு பின்னர் சமீப காலங்களில் விஜய் ஆண்டனி செருப்பு அணியாமல் இருப்பதை கண்ட ஒருவர் ஹிட்லர் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், அவரிடம் இது குறித்து கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த, விஜய் ஆண்டனி எந்த காரணமும் இல்லை. செருப்பு அணிய தோன்றவில்லை செருப்பு அணிய வேண்டும் என்று தோன்றினால் மீண்டும் அணிந்து கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.

Views: - 278

0

0