“விஜய் ஒருநாள் நடுத்தெருவுக்கு வருவார்”… சாபம் விட்ட பெண் – உண்மை பின்னணி என்ன? (வீடியோ)

Author: Vignesh
28 January 2023, 1:30 pm
Quick Share

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் உச்சக்கட்ட நட்சத்திரமாகவும் மாஸ் நடிகராகவும் திகழ்ந்து வருபவர்.

9 ஆண்டுகளுக்கு பின் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும், அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் ஒன்றாக ரிலீஸ் ஆகி உள்ளன. துணிவு, வாரிசு இரண்டு படங்களுக்குமே பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதால், இருதரப்பு ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். வசூலிலும் இரண்டு படங்களுக்குமே கடும் போட்டு நிலவி வருகிறது. அதன்படி பொங்கல் ரேஸில் அதிக கலெக்‌ஷனை அள்ளியது யார் என்ற எதிர்பார்ப்பு இருதரப்பு ரசிகர்களுக்குமே இருந்து வருகிறது.

varisu thunivu - updatenews360

துணிவு, வாரிசு படங்களுக்கு எப்போதுமே முதல் நாள் வசூல் என்பது மிகவும் முக்கியமானது. வாரிசு சற்று கலவையான விமர்சனங்களை பெற்று வசூலில் துணிவு படத்தை விட சில கோடிகள் வித்தியாசத்தில் பின்தங்கி இருந்தது.

சமீபத்தில் அவர் நடிப்பில் வாரிசு படம் வெளியாகி 250 கோடிக்கும் மேல் வசூலித்து வருவதாக செய்திகள் வெளிவந்தது. இதற்கிடையில் விஜய்யை பலர் விமர்சித்தும் பேசி வருகிறார்கள்.

Vijay - Updatenews360

இந்தநிலையில், சமீபத்தில் ஒரு பெண் விஜய் ஒருநாள் நடுத்தெருவுக்கு வருவார் என்று சாபம் விட்டு கத்திய வீடியோ வெளியாகி வைரலானது.

விசாரித்ததில், அவர் வேறு யாரும் இல்லை விஜய்யின் ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் அவரின் வீட்டில் வேலை செய்து அதன்பின் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகியாக இருந்தவரின் உறவினரின் பெண் என்று தெரியவந்துள்ளது.

vijay - updatenews360 k

விஜய்யுடன் இருந்த ஏசி குமார் என்பவர் விஜய்யின் தந்தையுடன் சேர்ந்து அரசியல் உள்கட்டத்திற்கு கொண்டு வர முற்பட்டதால் விஜய் நன்றி இல்லாமல் வேலையை விட்டு தூக்கியுள்ளார் என அந்த பெண் பேசியுள்ளார்.

இதனால் கஷ்டப்பட்ட ஏசி குமார் நடுத்தெருவுக்கு வரும் நிலைக்கு வந்துள்ளதால், இவர்களால் தான் விஜய்க்கும் எஸ் ஏ சிக்கும் இடையில் பிரச்சனையை ஏற்படுத்தியது என்றும் சிலர் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 433

1

2