இந்த மாதிரி இட்லி சாம்பார் செய்தா பத்து இட்லி கூட சாப்பிடலாம்!!!

Author: Hemalatha Ramkumar
3 May 2022, 1:12 pm
Quick Share

தென்னிந்தியாவில் பிரபலமான உணவுகளில் ஒன்று இட்லியும், சாம்பாரும் தான். குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று. துளியும் எண்ணெய் இல்லாமல் இட்லி ஆவியில் வேக வைக்கப்படுவதால் அனைத்து வயதினருக்கும் எளிதில் செரிமானம் ஆகிவிடும்.

இட்லிக்கு பல வகையான சட்னி இருந்தாலும் , கமகமக்கும் சாம்பார் இருந்தால், 4 இட்லி சாப்பிடுபவர்கள் கூட 6 இட்லி சாப்பிடுவார்கள்.
வாங்க கமகமக்கும் மணத்துடன் எப்படி இட்லி சாம்பார் செய்வது என்று பார்ப்போம் .

தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு – 1/2 கப்
பாசிப்பருப்பு – 1/2 கப்
வெங்காயம் – 1(பெரியது)
சின்ன வெங்காயம் – 16
பூண்டு – 2 பற்கள்
தக்காளி – 2
பச்சைமிளகாய் – 1
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன்
சாம்பார் தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கடுகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லி தழை – சிறிதளவு
கேரட் – 1
பீன்ஸ் – 4
கத்தரிக்காய் – 1
முருங்கைக்காய் – 1
புளி – ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
*முதலில் ஒரு குக்கரில் துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, பெரிய வெங்காயம் 1, தக்காளி, பூண்டு, பச்சைமிளகாய, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து மூன்று விசில் வைத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

* பீன்ஸ், கேரட், முருங்கைக்காய், கத்தரிக்காய் ஆகியவற்றை சிறு‌ துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

*பிறகு, அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்க்கவும்.

*பின்பு நறுக்கி வைத்துள்ள காய்கறிகள் சேர்த்து நன்கு வதக்கவும்.

* பின்பு சாம்பார்தூள் சேர்த்து வதக்கி விட்டு தண்ணீர் சிறிதளவு ஊற்றி காய்கறிகளை வேக விடவும்.

*காய்கறிகள் வெந்தவுடன் வேக வைத்த பருப்பை சேர்த்து கொதிக்க விடவும்.

* பிறகு புளிக்கரைசல் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

* பின்பு சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

*இப்போது சுவையான கமகமக்கும் இட்லி சாம்பார் ‌தயார்.

*இந்த இட்லி சாம்பாரை சுடச்சுட இட்லியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

Views: - 1066

0

0