தாய்ப்பால் கொடுக்கும் தாயாரா நீங்கள்… உங்களுக்கு தியானம் தரும் மகிமைகள் பற்றி தெரிஞ்சுக்கோங்க!!!

Author: Hemalatha Ramkumar
18 June 2022, 6:24 pm
Quick Share

ஒருவர் தியானம் செய்ய பல காரணங்கள் உள்ளன. இது மன அழுத்தத்தைக் குறைக்கும். அன்றாட வாழ்வில், தியானத்திற்காக சில நிமிடங்களை ஒதுக்குவது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு அதிசயங்களைச் செய்யும். மேலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் ஒரு தாய்மாருக்கு இது மிகவும் முக்கியமானது என்று நம்பப்படுகிறது.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் சுரப்பை மேம்படுத்த தியானம் உதவும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

உண்மையில், தவறாமல் தியானம் செய்யும் பாலூட்டும் தாய்மார்களின் குழு சராசரியாக பால் உற்பத்தியில் கிட்டத்தட்ட 500 சதவிகிதம் அதிகரிப்பதாக ஒரு ஆய்வு காட்டுகிறது.

தியானம் என்பது நாம் அனைவரும் செய்ய வேண்டிய ஒன்று என்றாலும், “குறிப்பாக நாம் இன்று வாழும் காலத்தில்”, புதிதாக குழந்தை பெற்றேடுத்த தாய் தனது பால் சுரப்பை மேம்படுத்துவதற்கான வழிகளைத் தேடுவதற்கு இது மிகவும் முக்கியமானது.

உங்கள் பாலூட்டலை அதிகரிக்க இந்த எளிதான மற்றும் மலிவு வழி பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கு ஐந்து தெளிவான காரணங்கள் உள்ளன. மேலும் இது தினசரி உங்கள் நேரத்தின் 15 நிமிடங்கள் மட்டுமே எடுக்கும்.

* இது பால் சுரப்பதற்கு உதவும்.

* தியானம் உங்கள் ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும் உதவும்.

* இது உங்கள் உணர்ச்சிகளை சிறப்பாக நிர்வகிக்க உதவும்.

* இறுதியாக, அது பால் கொடுப்பதை ஒரு இனிமையான அனுபவமாக மாற்றும்.

Views: - 522

0

0