காரின் மேல் அமர்ந்து ஊர்வலம் நடத்திய பிரபல நடிகர் மீது வழக்கு : நடிகரால் விபத்து ஏற்பட்டதாக ரசிகரே புகார் கொடுத்ததால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
13 November 2022, 1:50 pm
Case Against Actor - Updatenews360
Quick Share

பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை நடத்தி வருகிறார்.

சினிமாவில் தெலுங்கு சினிமா கதாநாயகன் போல் அரசியலிலும் அவருடைய நடவடிக்கைகள் காணப்படும் . கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆந்திர மாநிலம் தாடேப்பள்ளி அருகே உள்ள இப்பட்டம் என்ற கிராமத்திற்கு காரில் சென்றார்.

அப்போது அவர் தன்னுடைய காரின் மேல் ஏறி உட்கார்ந்து பயணம் செய்தார். இது தொடர்பான காட்சிகள் அப்போது சமூக வலைதளங்கள், மற்றும் ஊடகங்கள் ஆகியவற்றில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த நிலையில் சிவகுமார் என்பவர் இன்று தாடேப்பள்ளி காவல் நிலையத்தில் அளித்த புகாரில் அன்றைய தினம் நான் இப்பட்டம் கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தேன்.

அப்போது ஜனசேனா கட்சியினர் ஏராளமான வாகனங்களில் ஊர்வலமாக வந்தனர். காரின் மீது அமர்ந்து மிகவும் அஜாக்கிரதையாகவும் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமலும் பவன் கல்யாண் பயணம் செய்தார்.

இதனால் நான் என்னுடைய மோட்டார் சைக்கிள் இருந்து கீழே விழுந்து விட்டேன். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார். சிவகுமார் அளித்த புகாரின் பேரில் பவன் கல்யாண் மீது தாடேபள்ளி போலீசா வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Views: - 336

0

0