நிலவில் தரையிறங்கும் சந்திரயான் -3…. தயாராக இருக்கும் இஸ்ரோ : பணியை தொடங்கும் லேண்டர் மற்றும் ரோவர்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 August 2023, 1:31 pm
ISRO - Updatenews360
Quick Share

சந்திரயான்-3 விண்கலம், கடந்த ஜூலை 14ம் தேதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்.வி.எம்3 எம்4 (LVM3 M4) ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்பட்டது முதல் பூமியின் சுற்றுவட்டப்பாதை உயர்த்தும் பணி, நிலவின் சுற்றுவட்டப்பாதை குறைப்பு மற்றும் சந்திரயான்-3 விண்கலத்தின் உந்துவிசைக் கலனில் இருந்து ‘விக்ரம்’ லேண்டர் பகுதியை தனியாக பிரிப்பது என பல கட்டங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், சந்திராயன்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் ஆனது இன்று மாலை 18:04 மணி (6.04 மணிக்கு) அளவில் நிலவில் தரையிறங்க உள்ளது. அந்த வகையில், இன்று நிலவில் தரையிறங்கும் சந்திரயான்-3 லேண்டர் மற்றும் ரோவர் நிலவில் ஒரு நிலவு நாள் ஆயுள்காலத்தில் பலகட்ட ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.

ஒரு நிலவு நாள் என்பது பூமியை பொறுத்தவரையில் 14 நாட்கள் ஆகும். இந்த 14 நாட்களும் சந்திரயான்-3 லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய இரண்டும் நிலவில் பல ஆய்வுகளை மேற்கொள்ளும். இந்த லேண்டரில் ஆனது 4 பகுதிகள் உள்ளன. 26 கிலோ எடை கொண்ட ரோவரில் 2 பகுதிகள் உள்ளன.

Views: - 352

0

1