டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட வாய்ப்பு? வீட்டை சுற்றிலும் போலீஸ் குவிப்பு.. கட்சியினர் அதிர்ச்சி!

Author: Udayachandran RadhaKrishnan
4 January 2024, 8:57 am
arvind
Quick Share

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட வாய்ப்பு? வீட்டை சுற்றிலும் போலீஸ் குவிப்பு.. கட்சியினர் அதிர்ச்சி!

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை கடந்த நவம்பர் 2ம் தேதி ஆஜராகும் படி சம்மன் அனுப்பியிருந்தது.

ஆனால் அந்த சமயத்தில் மத்திய பிரதேச மாநிலம் சிங்ராலியில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானுடன் இணைந்து பேரணி ஒன்றில் கலந்துகொண்டதால் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.

இதையடுத்து, 2 வது முறை ஆஜராக கடந்த மாதம் 21 ஆம் தேதி அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் 10 நாள் தியானப் பயிற்சியில் ஈடுபட இருப்பதால் விசாரணைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மாட்டார் என தகவல் வெளியாகி இருந்தது.

இதனைத்தொடர்ந்து டெல்லியில் இருந்து நேற்று பிற்பகல் திடீரென அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் மாநிலம் புறப்பட்டுச் சென்றார்.

இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக நேற்று ஆஜராக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அமலாக்கத்துறை விசாரணைக்கு நேற்று ஆஜராக இயலவில்லை என அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் அனுப்பி இருந்தார்.

விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக உள்ளதாகவும் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் என்னை கைது செய்யும் நோக்கத்தோடு இருப்பதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் முதலமைச்சர் கெஜ்ரிவால் இன்று கைது செய்ய வாயப்புள்ளதாக ஆம் ஆத்மியை சேர்ந்த அமைச்சர் ஆதிஷி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், நாளை அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத் திட்டமிட்டுள்ளது. அவர் கைது செய்ய வாய்ப்புள்ளது என பதிவிட்டுள்ளார்.

Views: - 375

0

0