பெங்களூரூ குண்டுவெடிப்பு விவகாரம்… மத்திய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

Author: Babu Lakshmanan
20 March 2024, 8:02 pm
Quick Share

பெங்களூரூ குண்டுவெடிப்பு சம்பவத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் பெங்களூரூவில் பிரபலமான ராமேஸ்வரம் கஃபே எனும் உணவகத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படாத நிலையில், 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபரின் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து குற்றவாளியை தேடி வருகின்றனர். மேலும், துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளியை பிடிப்பதற்கான முயற்சியில் என்ஐஏ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், தமிழகத்தில் பயங்கரவாத பயிற்சி பெற்று வந்த நபரே, பெங்களூரூவில் உள்ள கஃபேவில் குண்டு வைத்ததாக மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கூறியிருந்தார். அவரது இந்தப் பேச்சுக்கு கடும் கண்டனம் கிளம்பியுள்ளது. அவர் மீது திமுக சார்பில் புகாரும் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் மத்தியஅமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை எடுக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தி.மு.க. புகார் அளித்த நிலையில் புகார் மீது கர்நாடகா தலைமை தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 48 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Views: - 249

0

0