23 மீனவர்களை விடுவிக்க கோரி வெளியுறவு அமைச்சருக்கு எல்.முருகன் கடிதம்
Author: kavin kumar15 October 2021, 8:54 pm
இலங்கை கடற்படை கைது செய்த 23 மீனவர்களை விடுவிக்க கோரி வெளியுறவு அமைச்சருக்கு மத்திய மீன்வள துறை இணை அமைச்சர் எல். முருகன் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 11-10-2021 அன்று நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 23 மீனவர்கள், 13-10-2021 அன்று, பாரம்பரிய மீன்பிடித் தளமாக உள்ள பருத்தித்துறை அருகே இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு, காரைநகர் கடற்படைத் தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள, தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 மீனவர்களை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இதைதொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு மத்திய மீன்வள துறை இணை அமைச்சர் எல். முருகன் கடிதம் எழுதியுள்ளார்.
0
0