காளிபிளவர் பறித்ததால் ஆத்திரம் ; தாயை கம்பத்தில் கட்டி வைத்து அடித்த மகன் ; பத்திரமாக மீட்ட பொதுமக்கள்..!!

Author: Babu Lakshmanan
25 December 2023, 9:50 pm
Quick Share

ஒடிசா – கியாஜ்ஹர் மாவட்டம் சரசபசி கிராமத்தை சேர்ந்த சாரதா (70) என்பவர் கணவரை இழந்த நிலையில், தனது 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இருவருக்கும் திருமணமாகி அதே கிராமத்திலேயே வசித்து வந்த நிலையில், சாரதா தனது மூத்த மகன் கருணாவின் வீட்டில் வசித்து வந்தார். நோய் காரணமாக மூத்த மகன் கருணா அண்மையில் உயிரிழந்த நிலையில், இளைய மகன் சஸ்துருகன் தனது மனைவியுடன் அதேகிராமத்தில் தனியே வசித்து வந்தார்.

சஸ்துருகனுக்கு சொந்தமான தோட்டத்தில் காலிபிளவர் பயிரிட்டுள்ளார். சாரதா நேற்று தனது இளைய மகனின் தோட்டத்தில் இருந்து சமைக்க காலிபிளவர் பறித்துள்ளார். இதனைக் கண்டு ஆத்திரமடைந்த சஸ்துருகன் தனது தாயார் சாரதாவை கடுமையாக தாக்கியதுடன், தனது தாயார் என்று கூட பார்க்காமல் சாரதாவை வீட்டிற்கு அருகே இருந்த மின்கம்பத்தில் கட்டி வைத்து கடுமையாக தாக்கியுள்ளார்.

மேலும், மாமியாரை காப்பாற்ற சென்ற மனைவியையும் அவர் தாக்கினார். இறுதியில் மகனிடம் இருந்து அவரது தாயார் மற்றும் மனைவியை ஊர் மக்கள் மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 485

0

0