11 மாதக் குழந்தையை கொன்று ரயில் தண்டவாளத்தில் உடல் வீச்சு… தாய் மற்றும் லிவ் இன் பார்ட்னர் கைது.. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!!

Author: Babu Lakshmanan
2 March 2024, 12:46 pm
Quick Share

தனது 11 மாத குழந்தையைக் கொன்று உடலை தண்டவாளத்தில் வீசிச் சென்ற வழக்கில் குழந்தையின் தாய் மற்றும் லிவ் இன் பார்ட்னரை போலீசார் கைது செய்தனர்.

மலப்புரம் அருகே திரூச்சூரில் 11 மாத குழந்தை கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் ஒரு பெண்ணையும், அவரது வாழ்க்கைத் துணையையும் (லிவிங் பார்ட்னர்) போலீஸார் நேற்று கைது செய்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தமிழ்நாடு கடலூரை சேர்ந்த ஸ்ரீபிரியா மற்றும் அவரது கணவர் ஜெயசூர்யன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஸ்ரீபிரியா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தனது கூட்டாளியும் அவனது தந்தையும் சேர்ந்து குழந்தையைக் கொன்றுவிட்டு, உடலை திருச்சூர் ரயில் நிலையத்தில் விட்டுச் சென்றதாகக் கூறினார்.

போலீசார் ஸ்ரீபிரியாவை திருச்சூர் ரயில் நிலையத்துக்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தினர். குற்றம் சாட்டப்பட்டவரின் வாக்குமூலத்தின்படி, சிறுவன் மூன்று மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு கைவிடப்பட்டான்.

இதுவரை, விசாரணைக் குழுவினர் சடலத்தின் பாகங்கள் எதையும் இதுவரை மீட்கவில்லை. கடந்த 3 மாதங்களில் திருச்சூர் ரயில் நிலையம் மற்றும் வளாகத்தில் அடையாளம் தெரியாத உடல்கள் எதுவும் மீட்கப்படவில்லை என்றும் ரயில்வே காவல்துறை உறுதி செய்துள்ளது.

சிறுவன் மர்மமான முறையில் காணாமல் போனது குறித்து ஸ்ரீபிரியாவின் உறவினர் விஜயா அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தொலைகாட்சிகளில் செய்தி வெளியிட்டுள்ளது. ஜெயசூர்யன் மற்றும் அவரது தந்தையால் குழந்தை கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

Views: - 124

0

0