ரயில் பயணியிடம் இருந்து 10 சவரன் நகை அபேஸ்… தப்பி ஓடிய கொள்ளையனுக்கு காத்திருந்த ட்விஸ்ட்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 June 2023, 2:25 pm
Train Chian Snatch - Updatenews360
Quick Share

சேலம் மேட்டூரை சேர்ந்தவர் இரத்தினசாமி. இவர் சென்னை – பாலக்காடு விரைவு இரயிலில் சென்ற போது, பையில் வைத்திருத்த 10 சவரன் நகை மாயமானது.

கோயம்புத்தூர் இரயில்வே போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கோயம்புத்தூர் இரயில் நிலையத்தில் சந்தேகத்திடமாக சுற்றிதிரிந்த கோயம்புத்தூர் குறிச்சியை சேர்ந்த ராஜேஷ்குமார் (வயது 41) என்பவரை பிடித்து விசாரித்த போது நகைகளை வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நகைகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 263

0

0