12 வயது சிறுமி மாயமான விவகாரம்… கோவை மாநகர காவல்துறை வேண்டுகோள்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 May 2023, 5:01 pm
Missing - Updatenews360
Quick Share

கோவை ஒண்டிப்புதூரைச் சேர்ந்த சுதாகரன் இவரது மகன் 12 வயது சிறுமி ஸ்ரீநிதி இவர் வீட்டு அருகே விளையாடு கொண்டு இருந்தார். அப்பொழுது திடீரென மாயமானார்.

இது குறித்து சுதாகரன் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் ஆறு தனி படைகள் அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில் அங்கு இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போது அவர் ஒண்டிப்புதூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து உக்கடம் செல்லும் பேருந்து ஏறிய காட்சிகள் பதிவாகி இருந்தது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதைத் தொடர்ந்து அந்த பேருந்து சென்ற பாதையில் இருக்கும் பேருந்து நிறுத்தங்களில் ஆய்வு செய்த போது அவர் எங்கு இறங்கினார் என்பது தெரியவில்லை என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் அந்த குழந்தையின் புகைப்படத்தை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் காவல்துறையினர் ஆறு தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 301

0

0