தமிழகத்தில் தொடரும் அவலம்.. கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 2 தொழிலாளிகள் பரிதாப பலி!!

Author: Udayachandran RadhaKrishnan
28 November 2022, 4:19 pm

விழுப்புரம் மாவட்டம் கோண்டூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோண்டூர் கிராமத்தில் சேகர் என்பவருக்கு சொந்தமான புதிதாக கட்டப்பட்ட வீட்டில் பயன்படுத்தப்படாத இருந்த கழிவுநீர் தொட்டியை புது வேலை செய்வதற்கு இன்று கொத்தனார் அய்யப்பன் (வயது 37) மற்றும் மணிகண்டன் (வயது 35) ஆகியோர் கழிவுநீர் தொட்டியை சீர் செய்த பொழுது விஷ வாயு தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன .

இதில் கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த இருவரையும் ஜேசிபி இயந்திரம் கொண்டு உடைத்து மீட்டு விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அப்பொழுது அவர்கள் முன்னதாக இருந்ததாக மருத்துவர் கூறினார். அடுத்து இருவரையும் பிரேத பரிசோதனைக்காக பிணவறையில் வைக்கப்பட்டன.

இது தொடர்பாக தற்பொழுது கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!