பேரனுடன் பைக்கில் வந்த தம்பதி.. நாளை முடிகாணிக்கை செலுத்த திருச்சிக்கு பயணம் : சட்டென நடந்த விபத்து.. மதுரையில் சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 December 2023, 9:59 pm
accident
Quick Share

பேரனுடன் பைக்கில் வந்த தம்பதி.. நாளை முடிகாணிக்கை செலுத்த திருச்சிக்கு பயணம் : சட்டென நடந்த விபத்து.. மதுரையில் சோகம்!!

மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. அவரின் மனைவி சசிகலா வயது 46. காளவாசல் பகுதியில் டிராவல்ஸ் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் ராஜா அவரது மனைவி மற்றும் இரண்டரை வயது பேரக்குழந்தை மூவரும் இருசக்கர வாகனத்தில் மதுரை பைபாஸ் சொக்கலிங்க நகர் சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது குறுக்கே ஒருவர் சைக்கிளில் வந்ததால் நிலை தடுமாறி திருமங்குலம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆரப்பாளையம் பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதியதால் ராஜா அவரது பேரன் இடதுபுறம் விழுந்தனர்.

மேலும் இவரது மனைவி கலா வலது புறம் விழுந்ததால் அரசு பேருந்து சக்கரம் அவர் மீது ஏறி உடல் நசிங்கி கணவர் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்தார் இதை பார்த்த அவரது கணவர் துடிதுடித்து அழுதார்.

தகவல் அறிந்த தீடிர் நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து ராஜாவிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது நாளை உறவினர் வீட்டுக்கு எனது மனைவி சசிகலா, பேரன் ஆகியோரை உறவினர் விட்டிற்கு சென்று நாளை சமயபுரம் கோவிலில் தனது பேரனுக்கு முடி காணிக்கை செலுத்துவதால் அவர்களை பேருந்துதில் ஏற்றிவிடுவதற்க்காக வந்த பொழுது இப்படி ஆகிவிட்டது என்று பரிதாபத்துடன் போலிசாரிடம் தெரிவித்தார்.

இதனால் அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது மேலும் விபத்து குறித்து அரசு பேருந்து ஒட்டுனரிடம் விசாரனை நடத்தி வருகின்றனர்

Views: - 401

0

0