பைக்கில் சென்ற தம்பதி கனரக லாரியில் சிக்கி பலி : நெஞ்சை உலுக்கிய சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
26 June 2023, 2:54 pm
Acc - Updatenews360
Quick Share

சூலூர் கொச்சின் தனியார் பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது கனராக லாரி ஒன்று பிரேக் பிடிக்காமல் ஏறிச்சென்ற சம்பவத்தில் கணவன் மனைவி இருவரும் உயிர் இழந்த சம்பவம் பதை பதைக்கும் சிசிடிவி வெளியாகி உள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சிந்தாமணி புதூரில் செல்லும் கொச்சின் பைபாஸ் சாலையில் ஏராளமான விபத்துக்கள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது 15 ஆண்டுகளாக சென்ட்ரல் மீடியேட்டர் இல்லாமல் ஒரு வழிப்பாதையாக இருக்கும் இந்த தனியார் பைபாஸ் சாலையில் இன்று திருப்பூரில் இருந்து கேரளாவை நோக்கி 66 வயதான ஜெகநாதன் என்பதும் 60 வயதான பாக்யலட்சுமி என்ற அவரது மனைவியும் விசேஷ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்தனர்.

அப்போது கொச்சின் பைபாஸ் சிக்னல் அருகே வரும் பொழுது வலது புறமாக திரும்பி உள்ளனர் அப்போது பின்புறமாக வந்த லாரி ஒன்று சிக்னல் ஏதும் கொடுக்காமலும் ஹாரன் ஏதும் அடிக்காமலும் லாரி அதிவேகமாக ஓட்டி வந்து பிரேக் பிடிக்காமல் பைக்கில் சென்று கொண்டு இருந்தவர்கள் மீது போதியது.

இதில் கணவன் மனைவி இருவருமே சம்பவ இடத்தில் பலியாகி உள்ளனர் சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் போலீசார் உடனடியாக உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதிய பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Views: - 358

0

0