இரவு 2 மணிக்கு வந்த கனவு பலிக்குமா? சரத்குமார் குறித்து திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கிண்டல்!

Author: Udayachandran RadhaKrishnan
13 March 2024, 1:27 pm
Masthan
Quick Share

இரவு 2 மணிக்கு வந்த கனவு பலிக்குமா? சரத்குமார் குறித்து திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கிண்டல்!

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் இரண்டரையாண்டு சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சியினை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான்அவர்கள் துவக்கி வைத்து கண்காட்சி அரங்கினை பார்வையிட்டார் உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சி.பழனி,விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.லட்சுமணன்,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ம.ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .

பின்னர் செய்தியாளரை சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு செய்ய வேண்டிய சாதனையை முதலமைச்சர் மு. க ஸ்டாலின் மூன்று வருடங்களில் செய்து முடித்திருக்கிறார் இதுதான் திராவிடம் மாடல் ஆட்சி மூன்றாண்டு சாதனைகளில் நூறு ஆண்டு உள்ள ஆயிரம் ஆண்டுகள் வரை மக்கள் நினைவில் கொள்ளும் வகையில் ஒவ்வொரு இல்லத்திலும் ஸ்டாலின் குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

தொடர்ந்து ஜாபர் சாதிக்கு குறித்து செய்தியாக கேட்ட கேள்விக்கு
ஜாபர் சாதிக் விஷயத்தில் சட்டம் தன் கடமையை சரிவர செய்யும் என்றார் மேலும் சரத்குமார் பாஜகவில் இணைந்து குறித்து கேள்வி எழுப்பியதற்கு இரண்டு மணிக்கு அவர் கனவு கண்டு கொண்டிருக்கிறார்.

அந்த கனவு எப்படி பலிக்குது என்று பார்ப்போம் அவர் சினிமாவில் படம் நடிப்பது போல் கனவு கண்டது குறித்து அவர் கனவு காண்பி வருகிறார் என்று அவர் சிரித்தபடி பதில் அளித்தபடி சென்றார்.

Views: - 210

0

0