பணத்தை கொட்டி கொடுத்த COCA COLA.. கோடி ரூபாய் கொடுத்தும் விஜயகாந்த் சொன்ன ஒரு வார்த்தை : கூனிக் குறுகிய நிறுவனம்!

Author: Udayachandran RadhaKrishnan
28 December 2023, 1:54 pm
cola
Quick Share

பணத்தை கொட்டி கொடுத்த COCA COLA.. கோடி ரூபாய் கொடுத்தும் விஜயகாந்த் சொன்ன ஒரு வார்த்தை : கூனிக் குறுகிய நிறுவனம்!

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலம் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 71. இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் நேரில் சென்றும் சமூக வலைத்தளங்களின் மூலமும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

விஜயகாந்தின் மறைவுச் செய்தி அறிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் ஆளாக வந்து அஞ்சலி செலுத்தினார். அதைப்போல, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகர்கள் விக்ரம், கமல்ஹாசன், அருண் விஜய், இசையமைப்பாளர் அனிருத், நடிகைகள் ரேகா, குஷ்பு, நமீதா உள்ளிட்ட பிரபலங்களும் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள்.

அவர் மறைந்தாலும் அவரது உதவி, புகழ், சேவை என்றும் அழியாது என பல பிரபலங்கள் கூறி வருகின்றனர். இதைவிட அவரை பற்றி அறிந்திராத பல தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன.

அதில் ஒன்றுதான் COCA COLA நிறுவனம் அவரை அணுகி விளம்பரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாக கூறினார்கள், அன்றைய காலம் ஒரு கோடி ரூபாய் என்பது ரூ.30 கோடிக்கு சமம். ஆனால் அவர் சொன்ன ஒரு வார்த்தை, நான் அதில் நடித்தால் என்னை நம்பியுள்ள ரசிகர்கள், மக்கள் அதை அருந்துவார்கள்.

என்னால் என் மக்கள் பாதிக்கப்படக்கூடாது, நான் உங்கள நிறுவனத்திற்காக நடித்தால் தமிகத்தில் உள்ள சிறய குளிர்பான நிறுவனம் பாதிக்கப்பட்டது, எனக்கு பணம் முக்கியம் இல்லை, தமிழ்நாடும், தமிழக மக்களும் தான் முக்கியம் என கூறியுள்ளார்.

அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதனை நமது தேசம் இழந்துவிட்டது. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்வோம்.

Views: - 313

0

0