சட்டப்படி தலாக் பெற்று விவாகரத்து வாங்கியும் அவதூறு.. 2வது கணவருக்கு மிரட்டல் : முன்னாள் கணவர் மீது பெண் புகார்!

Author: Udayachandran RadhaKrishnan
9 March 2024, 5:49 pm
Cbe
Quick Share

சட்டப்படி தலாக் பெற்று விவாகரத்து வாங்கியும் அவதூறு.. 2வது கணவருக்கு மிரட்டல் : முன்னாள் கணவர் மீது பெண் புகார்!

கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் நவுசத் அலி. இவர் ஒசூரில் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். இவர் குனியமுத்தூரை சேர்ந்த ரஜீனா நிலாபர் (29) என்பவரை திருமணம் செய்து வாழ்த்து வந்தார்.

இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. மேலும் திருமணம் செய்யும் போது நவுசத் அலி தான் ஒரு பி.எஸ்.சி பட்டாரி என்று கூறியும், வரதட்சனை பெற்று திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் அடிக்கடி குடித்து விட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட நவுசத் வீடு கட்ட மேலும் 20 லட்சம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் ரஜினாவை தாய் வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.

தொடர்ந்து பிரச்சனை இருந்து வந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இஸ்லாம் முறைப்படி இருவரும் தலாக் செய்து விவாகரத்துப் பெற்று பிரிந்து வாழ்த்து வந்தனர்.

மேலும் தலாக் ஒப்பந்தத்தில் அவர்களது மகள் ரஜினாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன் ரஜினாவிற்கு வீட்டில் பார்த்து முறைப்படி இரண்டாவது திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக முதல் கணவர் நவுசத் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாகவும், இரண்டாவது கணவருக்கும் செல்போன் மூலம் மிரட்டல் விடுப்பதாக ரஜினா தெரிவித்துள்ளார்.

முறைப்படி விவாகரத்து பெற்று, வாழ்ந்து வரும் நிலையில் தற்போது வேண்டுமென்றே, கணவருக்கு மிரட்டல் விடுப்பது, குழந்தையை ஒப்படைக்க வேண்டும் எனவும் பிரச்சனை செய்து வருவதாக தெரிவித்தார்.

குடிபோதையில் தினமும்ந் என்னை குழந்தை முன்னிலையிலேயே அடித்து துன்புறுத்தியதோடு ஒசூர் ரவுடி என தன்னை கூறிக் கொண்டு சுற்றி வரும் அவருக்கு வேறு பெண்ணுடனுன் தொடர்பு உள்ளது. தற்போது வேண்டுமென்றே தனது வாழ்க்கையும், மகள் வாழ்க்கையையும் கெடுக்க பிரச்சனை செய்வதாக தெரிவித்தார்.

Views: - 83

0

0