பட்டப்பகலில் பயங்கரம்… பெட்ரோல் பங்க்கில் இளைஞர் கொடூரமாக வெட்டிக்கொலை ; போலீசார் விசாரணை..!!

Author: Babu Lakshmanan
8 June 2023, 6:09 pm

திண்டுக்கல்லில் பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பெட்ரோல் நிலையத்தில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள முருக பவனம் பகுதியில் பாரத் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பெட்ரோல் பங்க் முன்பாக சாலையின் ஓரத்தில் வெல்டிங் பட்டறை தொழிலாளியான அழகு பாண்டி என்ற நபருடன் இரண்டு நபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அழகு பாண்டியை பெட்ரோல் பங்க் நிலையத்திற்குள் அழைத்து வந்து கழுத்தில் குத்தி முகத்தில் பயங்கரமாக வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அழகு பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அழகு பாண்டியன் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

திண்டுக்கல் பழனி பிரதான சாலையில் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!