அண்ணாமலை வெளியிட்ட DMK FILES… ஆவேசமாக பேசிய அதிமுக எம்பி சி.வி. சண்முகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 April 2023, 2:05 pm
CV Shanmugam - Updatenews360
Quick Share

விழுப்புரம் நகர அதிமுக சார்பில் விழுப்புரம் நகரில் பல்வேறு இடங்களில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட விழுப்புரம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சிவி சண்முகம் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
திமுகவைப் பற்றி எல்லாருக்கும் தெரிந்த விஷயம் திமுக என்றால் கொள்ளையடிப்பது, அரசாங்க சொத்தை அபகரிப்பது சொத்து சேர்ப்பது இதுதான் அவர்களது கொள்கை அதிமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் மாநிலங்களவை உறுப்பினருமான சிவி சண்முகம் தெரிவித்தார்.

Views: - 309

0

0