அரசு ஊழியர்களுக்கு டபுள் ட்ரீட் : அகவிலைப்படியும் இருக்கு.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் தமிழக அரசு!!

Author: Udayachandran RadhaKrishnan
7 August 2023, 9:15 am
TN - Updatenews360
Quick Share

கடும் நெருக்கடி, கடன் சுமை மற்றும் கொரோனாவினால் ஏற்பட்ட வருவாய் இழப்பு போன்ற காரணத்தினால் தமிழக அரசு ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் அகவிலைப்படி உயர்வினை வழங்கப்படாமலேயே இருக்கிறது.

எனவேதான், மத்திய மற்றும் தமிழக அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறார்கள்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்னும் ஓரிரு நாட்களில் அடுத்த அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியிருக்கிறது.

குறிப்பாக, 3 சதவீதம் உயர்த்தி இப்போதுள்ள 42 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து அகில இந்திய ரயில்வே பொதுச்செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா கூறும் போது, அகவிலைப்படி 4% உயர்த்தப்படும் என்று எதிர்பார்த்தோம்.

இப்போது ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 42 சதவீத அகவிலைப்படியைப் பெறுகின்றனர். செலவுகள் அதிகரித்து வருவதால் அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்தினால் பெரும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு விரைவில் வழங்கப்பட்டுவிடும் என்கிறார்கள். அதாவது, தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி ஏப்ரல் 1-ம் தேதி முதல் வழங்கப்பட்டிருக்கிறது…

இதையடுத்து, 4 சதவீதம் வரைக்கும் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்கிறார்கள். அப்படி 4% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டால், தமிழக அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ. 25,500 என்றால், ஊழியர்களுக்கு 10,610 வரைக்கும் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதால், தமிழக அரசு ஊழியர்களும் மகிழ்ச்சியில் காத்துள்ளனர்.

Views: - 227

1

0