குடிபோதையில் இளைஞர்கள் அராஜகம்… நடுரோட்டில் பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் ; அதிர்ச்சி வீடியோ!!

Author: Babu Lakshmanan
3 July 2023, 8:36 am
Quick Share

மதுரை சோழவந்தான் அருகே வடகாடு பட்டியில் குடிபோதையில் அட்டூழியம் செய்த வாலிபர்கள், பெண்ணை அடித்து உதைக்கும் பதபதைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அடுத்துள்ள வடகாடு பட்டி பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலர், அப்பகுதியில் குடிபோதையில் சாலையில் சென்ற வாலிபர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். அதனை தடுக்க வந்த பெண்ணை கம்பு, கட்டை கல்லால் அடித்து உதைக்கும் பரபரப்பு காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

காயமடைந்த பெண் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். வீடியோ காட்சிகளை அடிப்படையாக கொண்டு காடுபட்டி போலீசார் பெண்ணை தாக்கிவிட்டு தப்பியோடிய போதை ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Views: - 381

0

0