கோவை மாநகராட்சியில் நூதன முறையில் நடைபெறும் ஊழல்.. CCCA ஒப்பந்ததாரர் நலச்சங்கம் புகார்!

Author: Udayachandran RadhaKrishnan
4 May 2024, 8:49 pm
CCCA
Quick Share

கோவை மாநகராட்சியில் நூதன முறையில் நடைபெறும் ஊழல்.. CCCA ஒப்பந்ததாரர் நலச்சங்கம் புகார்!

கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் இன்று 4ம் தேதி காலை 11:00 மணி அளவில் திருச்சி ரோட்டில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது.

இந்த கூட்டத்தில் சங்கத் தலைவர் உதயகுமார், செயலாளர் KCP Chandraprakash, பொருளாளர் அம்மாசையப்பன், துணை செயலாளர் மைக்கேல் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

CCCA---updatenews360

இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த தீர்மானங்கள் பின்வருமாறு, நமது சங்க உறுப்பினாகள்‌ பலரது நீண்ட நாள்‌ கோரிக்கையை ஏற்று இன்றைய செயற்குழு மற்றும்‌ நாவாகக்‌ குழு கூட்டத்தில்‌ Work Experience
Certificate, Bid capacity, Tools and plants, Machineries, Financial Capacity, GumenTmeney தகுதியுள்ள ஒப்பந்ததாராகள்‌ மட்டுமே பங்கு பெற வேண்டும்‌ என்பது பொதுப்‌பணி, நெடுஞ்சாலை மற்றும்‌ மாநகராட்சியின்‌ பொதுவான விதியாகும்‌.

ஆனால்‌ தற்போது நடைபெறும்‌ ஒப்பந்தங்களில்‌ ௨௦, பர்ஜ்லு மற்றும்‌ Corporation பணிகளில்‌ தகுதியில்லாத நாவனங்களுக்கே முன்னுரிமை வழங்கி அவாகள்‌ சமாப்பிக்கும்‌ ஆவணங்களை சரிபார்க்காமல்‌ அதன்‌
உண்மைத்தன்மையை சரிவர ஆவணம்‌ செய்யாமல்‌ போலியாக பெற்றுக்‌ கொண்டு பணிகளை வழங்கி வருகிறார்கள்‌.

இதனால்‌ பல நாள்‌ ஒப்பந்த பணி செய்துவரும்‌ நோமையான ஒப்பந்த தகுதிகள்‌ உள்ள பல ஒப்பந்ததாரா்களுக்கு வாய்பபே கிடைப்பதில்லை இதனால்‌ தகுதியற்ற ஓப்பந்தாராகள்‌ தரமற்ற வகையில்‌ பணிகளை செய்து ஒப்பந்ததாராகளுக்கும்‌ மாநகராட்சிக்கும்‌ அவப்பெயர்‌ ஏற்படுத்தி அதிகாரிகள்‌ துணையுடன்‌ பல
கோடிகளை சுருட்டியுள்ளனர்‌. இதனை எதாத்து உரிய நடவடிக்கைகளை எடுக்க ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

PWD, Highways LOMMILD Corporation ஒப்பந்தம்‌ வைத்து முறையாக பணிகளை மேற்கொள்ள வேண்டும்‌ ஆனால்‌ கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக சில குறிப்பிட்ட ஒப்பந்தார்கள்‌, பொறியாள்கள்‌ துணையுடன்‌ மதிப்பீடு தயாரிக்கப்படுதை தகவல் வெற்றுக்கொண்டு வேண்டுமென்றே மதிப்பீட்டில் SCHEDULE OF RATESல் இல்லாத Item of Workகுகளை அதிகப்படியாக சேர்த்து அதிக
விலைப்புள்ளிக்கு மதிப்பீடு தயாரித்து அதனை ஒப்பந்தம்‌ வரும்‌ 10 நாட்களுக்கு முன்பே அட்வான்ஸ் ஒர்க் என்ற பெயரில் முன்கூட்டியே செய்கிறார்கள்.

இந்த பணிகளுக்கு யாரும் டெண்டர் போட வேண்டாம் என சம்மந்தப்பட்ட அரசு துறையினர் தகவல் தெரிவிக்கிறார்கள். இது நூதன முறையில் நடைபெற்று வரும் மெகா ஊழல். இந்த முறைகேடு தொடர்பாக அனைத்து அரசுத் துறையினருக்கு புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் .மேலும் அட்வான்ஸ் வொர்க் என்ற பெயரில் நடந்த அனைத்து பணிகளையும் விலை புள்ளிகளை ஆய்வு செய்து அதில் உள்ள தவறுகள் தொடர்பாகவும் புகார் தரப்படும்.டெண்டரில் 5 சதவீதத்திற்கும் குறைவான விலைப்புள்ளி வழங்கினால் மதிப்பீட்டுத் தொகையில் 2 சதவீத தொகையை கூடுதலாக வைப்புதொகையாக செலுத்திய பின்பு பணிகளை துவக்க வேண்டும் என்பது விதி. ஆனால் பல பணிகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் இதனை யாரும் சரியாக கடைபிடிக்கவில்லை.

இந்த தவறுகளுக்கு காரணமான ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜல்லி,எம் சாண்ட் போன்ற கட்டுமான பொருட்கள் அதிக விலை ஏற்றம் அடைந்துள்ளது. எனவே ஷெட்யூல் ஆப் ரேட் படி விலையை உயர்த்தி தர வேண்டும்.

லாரி போக்குவரத்து கணக்கீடு செய்யும் போது அருகில் உள்ள உபயோகத்தில் இல்லாத குவாரிகளை கணக்கில் எடுக்கிறார்கள். இதை தவிர்த்து உபயோகத்தில் உள்ள குவாரிகளை கணக்கீடு செய்து திட்டம் தயாரிக்க வேண்டும்.கோவை மாநகராட்சி கணக்கு பிரிவு அலுவலர்கள் 3 ஆண்டுகளுக்கு மேலாக அதற்குரிய பைல்களை சரியாக பராமரிக்க வில்லை.எந்தெந்த ஒப்பந்ததாரர்களுக்கு எந்தெந்த பணிகளுக்கு எவ்வளவு தொகை வழங்க வேண்டும் என்ற கணக்குகளை முறையாக பராமரிக்கலாம் அலட்சியமாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு சாதகமான ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே டெபாசிட் தொகை முழுவதுமாக திரும்ப வழங்குகிறார்கள். ஒப்பந்ததாரர்களுக்கு பில் தொகை சீனியாரிட்டி அடிப்படையில் வழங்க வேண்டும்.

ஆனால் மாநகராட்சி கணக்கு பிரிவினர் பல ஆண்டுகளாக தங்களுக்கு சாதகமான ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே பில் தொகை வழங்கிவிட்டு மற்றவர்களுக்கு பல ஆண்டுகளாக மாதங்களாக பில் தொகையை கிடப்பில் வைத்திருக்கிறார்கள்.

பாரபட்சமாக செயல்படும் கணக்கு பிரிவு மீது உரிய புகார் வழங்கப்படும்.மாநகராட்சி பணிகளில் ஒரு சதவீத அடிப்படையில் மேற்கோள் செய்து பணிகள் தொடர்பாக புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என சங்க கூடத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

Views: - 133

0

0