திட்டிய தாய்.. தலைக்கேறிய கஞ்சா போதையில் மகன் செய்த வெறிச்செயல் : வீட்டிற்குள் புதைக்கப்பட்ட சடலம்.. ஷாக் சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
24 November 2023, 4:59 pm
Murder - Udpatenws360
Quick Share

திட்டிய தாய்.. தலைக்கேறிய கஞ்சா போதையில் மகன் செய்த வெறிச்செயல் : வீட்டிற்குள் புதைக்கப்பட்ட சடலம்.. ஷாக் சம்பவம்!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள தொளர் கிராமத்தில் 21 இளைஞன் சேவாக் தனது தாயுடன் வசித்து வந்திக்கிறார்.

இவர் கடந்த சில நாட்களாக கஞ்சா போதைக்கு அடிமையாகியிருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இப்படி இருக்கையில் 2 தினங்களுக்கு முன்னர் இவருடைய தாய் கஸ்தூரி திடீரென காணாமல் போயுள்ளார்.

உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் கஸ்தூரியை எல்லா இடங்களிலும் தேடியுள்ளனர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் மகன் சேவாக்கிடம் விசாரித்தனர்.

சேவாக் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்திருக்கிறார். மட்டுமல்லாது பூட்டிய வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. வீட்டை திறந்து பார்த்தபோது சுவரில் பல்வேறு இடங்களில் ரத்த கறை ஏற்பட்டிருக்கிறது.

இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சேவாக், தனது தாய் கஸ்தூரியை அடித்து கொலை செய்து, சடலத்தை வீட்டிற்குள்ளேயே புதைத்திருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து வருவாய் துறையினரின் உதவியுடன் கஸ்தூரியின் உடலை தோண்டி எடுத்த போலீசார் அதை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

மகன் சேவாக் மீது கொலை, குற்றத்திற்கான தடயங்களை அழித்தல் என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

பெற்ற தாயையே கஞ்சா போதையில் 21 வயது மகன் அடித்து கொலை செய்து, சடலத்தை வீட்டிற்குள்ளேயே புதைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாராயக்கடைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட நெடும் போராட்டத்தை போல கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிராகவும் குரல் எழுப்ப வேண்டி இருக்கிறது என சமூக செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

Views: - 195

0

0