இனி காபி, டீ எல்லாம் கிடையாது… பிராந்தி, விஸ்கி தான்.. திமுகவுக்கு தொடங்கியது கெட்ட காலம் – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு !!

Author: Babu Lakshmanan
12 July 2023, 2:32 pm
Quick Share

காலையில் 7:00 மணிக்கு இனிமேல் டீ காபி குடிக்க வேண்டாம் என்றும், பிராந்தி, விஸ்கி குடிக்கலாம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக மதுரை கோரிப்பாளையம் அதிமுக மாநகர் மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இதனை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர் பேசியதாவது :- மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாடு பல மடங்கு சிறப்பாக நடைபெற உள்ளது. அதிமுகவுக்கு ஏறுகாலம் தொடங்கி இருக்கிறது. திமுகவுக்கு இனி இறங்கு காலம் தான்.

காலையில் 7:00 மணிக்கு டாஸ்மாக் திறக்கப்பட உள்ளது. மினி குவாட்டர் மக்களுக்கு கொடுக்க உள்ளார்கள். இது மக்கள் மத்தியில் அது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. காலையில் 7:00 மணிக்கு காபி, டீ குடிக்க வேண்டாம். பிராந்தி விஸ்கி குடிக்கலாம். திமுக அரசு எதை நோக்கி பயணிக்கிறது என்பது நன்றாக தெரிகிறது. முன்னாள் முதல்வர் கலைஞர் தான் இந்த தலைமுறையை கெடுத்தவர்.

தமிழக மக்களை குடிகாரன் ஆக்கிய முதல்வராக ஸ்டாலின் பெயர் எடுப்பார். பள்ளிக்கூடத்துக்கு போகும்போதே குடித்துவிட்டு போங்கள், மட்டையாகி விடுங்கள். கூலித் தொழிலாளர்கள், கட்டுமான பணியாளர்கள் காலையில் குடித்துவிட்டு வேலைக்கு சென்றால் குடும்பத்திற்கு உத்தரவாதம் யார் கொடுப்பது. இது எங்களுக்கு மன வேதனையாக இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தான் பொதுச் செயலாளர் என தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்.

வெங்காயம் விலை 240 ரூபாய் ஆகி விட்டது. வெங்காயத்தை உரித்தால் தான் கண்ணீர் வரும் வெங்காய விலையை கேட்டாலே இவர்கள் ஆட்சியில் கண்ணீர் வருகிறது.வீட்டு வரி,மின் கட்டண உயர்வு தமிழகத்தின் சட்ட ஒழுங்கு மோசமாக உள்ளது.
இரண்டு கோடியே 25 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை கொடுத்தாலும், யாரும் ஓட்டு போட மாட்டார்கள் திமுகவிற்கு.

இனி 90 மில்லி லிட்டர் சாராயம் ஏழு மணிக்கு கிடைக்கும். 7 மணிக்கு டாஸ்மாக் கடை திறப்பு விரைவில் நடைமுறைப்படுத்துவார்கள். இதை கவனித்த தாய்மார்கள் யாரும் ஓட்டு போட மாட்டார்கள். நாடாளுமன்றத் தேர்தல் எங்களுக்கு எளிதாகிவிடும்.
திமுகவின் துக்ளக் தர்பார் ஆட்சியை மக்கள் விரும்ப மாட்டார்கள். கலைஞர் நூலக மாநாட்டை மக்கள் கூட்டத்தை கூட்டி செயற்கையாக கூட்டத்தை கூட்ட நினைக்கிறார்கள்.

தக்காளியை ரேஷன் கடையில் விற்பது பெருமையா? நகரும் கடைகள் மூலம் தக்காளியை விற்பனை செய்ய வேண்டும். திமுகவினர் செந்தில் பாலாஜியை சுதந்திரப் போராட்ட தியாகி போல் பார்க்கின்றனர், என்று பேசினார்.

Views: - 178

0

0