அடிக்கடி சண்டை போட்டு தாய் வீட்டுக்கு சென்ற மனைவி… கோபத்தில் அரிவாளால் வெட்டிய கணவன் கைது..!!

Author: Babu Lakshmanan
29 March 2023, 8:59 am
Quick Share

திருச்சியில் குடும்பத்தகராறில் கல்லூரி பெண் ஊழியரை சரமாரி அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பாக அவரது கணவன் கைது செய்யப்பட்டார்.

திருச்சி சுப்பிரமணியபுரம், கென்னடி தெருவில் சேர்ந்தவர் முகமதுபாபு என்ற கண்ணன் (40). பெயிண்டர். இவருடைய மனைவி சமீமாபேகம் (34). இவர் சுப்ரமணியபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

இந்த நிலையில், கணவன் – மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சமீமாபேகம் தனது தாயாருடன் வசித்து வந்தார். முகமதுபாபு அவ்வப்போது, அவர்கள் வீட்டிற்கு வந்து விட்டிற்கு வரச் செல்லிவிட்டு செல்வார்.

அதுபோல் இரவு முகமதுபாபு வீட்டுக்கு வந்த போது கணவன் – மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த முகமதுபாபு மறைத்து வைத்திருந்த அரிவாளால் தனது மனைவி சமீபாபேகத்தை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். இதில் தலை, கழுத்து உள்ளிட்ட பகுதியில் அவருக்கு வெட்டு விழுந்தது.

ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்த சமீமா பேகத்தை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர், தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி தகவல் அறிந்த கே.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து முகமதுபாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 264

0

0