ஆசிய சாம்பியன்ஸ் பட்டத்தை வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு இத்தனை கோடி பரிசா? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி!!

Author: Udayachandran RadhaKrishnan
13 August 2023, 10:52 am
Udhayanidhi - Updatenews360
Quick Share

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வந்தது.

இந்த தொடரில், தோல்வியையே சந்திக்காத இந்தியா அணியும் மலேசியா அணியும் இறுதி போட்டியில் மோதின. இதில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியா அணியை வீழ்த்தி 4வது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றிய இந்திய ஹாக்கி அணிக்கு வெற்றி கோப்பையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் ஆகியோர் வழங்கினர். உடன் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இருந்தார்.

4வது முரையாக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, தமிழக அரசு சார்பில் வீரர்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் பரிசு தொகையும், பயிற்சியாளர்களுக்கு 2 1/2 லட்ச ரூபாய் பரிசு தொகை என மொத்தமாக தமிழக அரசு சார்பில் 1.10 கோடி ரூபாய் அளவுக்கு பரிசு அறிவிக்கப்பட்டது.
அதே போல ஹாக்கி இந்தியா அமைப்பில் இருந்து வீரர்களுக்கு 3 லட்ச ரூபாய் பரிசு தொகையும், பயிற்சியாளர்களுக்கு 1 1/2 லட்ச ரூபாய் பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டது.

இறுதி போட்டி முடிந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வீரர்களுக்கு 5 லட்சம் பயிற்சியாளர்க்ளுக்கு பரிசு என கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்த தமிழக முதல்வருக்கு, நன்றி.

போட்டிகள் நடைபெற்ற அத்தனை நாளும் அரங்கத்தை ஹவுஸ்புல்லாக வைத்த ரசிகர்களுக்கு நன்றி. இதன் மூலம் ஹாக்கி விளையாட்டு போட்டிக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Views: - 275

0

0