தடுப்பூசி போட்ட மறுநாள் ரத்தப்போக்கு.. பிறந்து 52 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த சோகம்.. அரசு மருத்துவமனை மீது பெற்றோர் புகார்..!!

Author: Babu Lakshmanan
22 December 2022, 1:15 pm

திண்டுக்கல் அருகே பிள்ளையார் நத்தத்தைச் சேர்ந்த ஆண் குழந்தை தடுப்பூசி போட்ட மறுநாளே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் அருகே உள்ளது பிள்ளையார் நத்தம் இந்த ஊரை சேர்ந்த தம்பதிகள் – விஜயகுமார் சுகன்யா. இவர்களுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 52 நாட்களுக்கு முன்பாக ஆண் குழந்தை பிறந்தது. குரு பிரசாத் என்று அந்த குழந்தைக்கு பெயர் வைத்தார்கள்.

குழந்தை பிறந்து 45 நாட்களுக்கு பிறகு போடப்படும் தடுப்பூசியை போட வேண்டும். ஆனால் 52 நாட்களாகி போடவில்லை என்பதால், உடனடியாக தடுப்பூசி போட வேண்டும் என்பதற்காக ஆலாம்பட்டி ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று குழந்தைக்கு தடுப்பூசி போட்டனர்.

நேற்று புதன்கிழமை தடுப்பூசி போட்டு ஒரு நாள் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக்கு, இன்று காலை மூக்கிலும், வாயிலும் ரத்தம் கசிந்துள்ளது. இதனால், பதறிப் போன பெற்றோர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு தூக்கி வந்தனர்.

அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால், மருத்துவமனையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைக்கு ஒரே நாளில் மூன்று தடுப்பூசி போடப்பட்டாதாக குற்றச்சாட்டை வைக்கின்றனர்.

  • why police did not arrested virat kohli for 11 death in rcb celebration அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்