தலைக்கேறிய போதையில் வீட்டில் முகம் சுளிக்க வைத்த கணவன் : தட்டிக் கேட்ட மனைவியை கத்தியால் குத்தியதால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
15 December 2023, 9:09 pm
Husband Wife
Quick Share

தலைக்கேறிய போதையில் வீட்டில் முகம் சுளிக்க வைத்த கணவன் : தட்டிக் கேட்ட மனைவியை கத்தியால் குத்தியதால் பரபரப்பு!!

தூத்துக்குடி தட்டப்பாறை அருகே பேரூரணி சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் பாலாஜி (35), இவர், கொத்தனாராக வேலை பார்த்துவருகிறார், இவரது மனைவி முத்துமாரி (30) சாயர்புரத்தில் உள்ள கம்பெனியில் சுலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி 10 வருடம் ஆகிறது, இவர்களுக்கு சபரிவாசன் (8)என்ற ஒரு மகன் உள்ளார்.

இந்த நிலையில், நேற்று இரவு பாலாஜி மது குடித்துவிட்டு வீட்டிற்குள் வாந்த பாலாஜி வீட்டில் வாந்தி மற்றும் மலம் போனதாகவும், இதனை முத்துமாரி கண்டித்து சத்தம் போட்டதால் ஆத்திரம் அடைந்த பாலாஜி குடிபோதையில் வீட்டின் சமையல் அறையில் இருந்த அடுப்பை உடைத்து, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து முத்துமாரியை சராமரியாக குத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.

இதில் இடது பக்க நெஞ்சில் மார்புக்கு மேல் பகுதி,வலது, இடது கை மணிக்கட்டில் இரண்டு இடங்கள் மற்றும் வலது பக்க தொடை, கன்னம் ஆகிய பகுதிகளில் கத்திக்குத்து காயம் பட்ட முத்துமாரியை 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரது உறவினர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து தட்டப்பாறை காவல்நிலைய உதவி ஆய்வாளர் சகிலா சைனி வழக்குப்பதிவு செய்து இச்சம்வத்தில் ஈடுபட்ட முத்துமாரி கணவர் பாலாஜியை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 304

0

0