பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க பயப்படுகிறதா தமிழக அரசு? செய்தியாளர்கள் சந்திப்பில் கொந்தளித்த அமைச்சர் உதயநிதி!!

Author: Udayachandran RadhaKrishnan
10 December 2023, 10:49 am
uday
Quick Share

பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க பயப்படுகிறதா தமிழக அரசு? செய்தியாளர்கள் சந்திப்பில் கொந்தளித்த அமைச்சர் உதயநிதி!!

திருவொற்றியூரில் வெள்ள நிவாரண பொருட்களை மக்களுக்கு வழங்கிய பின் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, 2015 ஆம் ஆண்டு கனமழை காரணமாகத் துரித நடவடிக்கை எடுத்ததன் காரணமாக விரைந்து மக்களுக்கு மின்சாரம் கொடுத்தோம். ஆனால் தற்போது அப்படியில்லை.

இந்த மாதிரி மழைக் காலங்களில் மக்களுக்கு மின்சாரம் தங்கு தடையில்லாமல் கிடைப்பதற்காகத்தான் தரையில் மின்சார ஒயரை பதித்து மின் இணைப்பு அளித்தோம். தற்போது மின்சாரம் தடையில்லாமல் கிடைப்பதற்கு நாங்கள்தான் காரணம். மழை வெள்ளம் காரணமாகச் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

புயல் வரும் என்று வானிலை மையம் எச்சரிக்கை கொடுத்தும் இந்த அரசாங்கம் மெத்தனமாக இருந்திருக்கிறது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் உணவு, பால், குடிநீர் பெரும்பாலான பகுதிகளில் கிடைக்கவில்லை என்று தமிழக அரசு மீது குற்றச்சாட்டை வைத்திருந்தார். அதேபோல், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் தமிழக அரசு மீது குற்றச்சாட்டை வைத்திருந்தனர்.

Views: - 226

0

0