‘எனக்கு என் புருஷன்தான் எல்லாமே’… விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற திருநங்கை ; காவல்நிலையம் முன்பு பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
7 August 2023, 5:01 pm
Quick Share

கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி கரூர் நகர் காவல் நிலையம் அருகே திருநங்கை ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் உள்ள அரசு காலனி பகுதியில் வசிப்பவர் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த தாட்சாயினி. திருநங்கையான இவர், கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருச்சியைச் சார்ந்த சந்தோஷ் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு அவரது இருசக்கர வாகனத்தை சர்வீஸ் செய்து விட்டு வருவதாக சொல்லிவிட்டு சென்ற சந்தோஷ் குமார்,, இன்று வரை வீடு வரவிடாமல் அவர்கள் குடும்பத்தினர் தடுத்து வருகின்றனர்.

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் நடவடிக்கை எடுக்காத நிலையில், எனது கணவரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என கடந்த வாரம் திங்கட்கிழமை மக்கள் குறைதீர் நாளன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

இந்நிலையில், எந்தவித நடவடிக்கையும் இல்லாத காரணத்தால் இன்று திடீரென கரூர் நகர காவல் நிலையம் அருகே விஷம் அருந்தும் வீடியோவை வெளியிட்டு விட்டு காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தாட்சாயணி விஷம் அருந்தியது அறிந்த காவலர்கள், உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் தாட்சாயினியை கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தாட்சாயனிடம் விசாரித்த போது, காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்றால் மூன்றாம் பாலினத்தவர் என அவமானப்படுத்துவதாக தெரிவித்தார்.

தான் விஷம் அருந்தியதாக கூறிவிட்டு தனக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென கண்ணீர் மலர் கூறினார். இச்சம்பவம் குறித்து கரூர் நகர காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 419

0

0