திமுக – நாம் தமிழர் கட்சியினர் இடையே மீண்டும் மோதல்.. போலீசார் மீது கல்வீச்சு : பாதியில் வெளியேறிய சீமான்… ஈரோட்டில் பதற்றம்..!!

Author: Babu Lakshmanan
22 February 2023, 9:46 pm

ஈரோடு இடைத்தேர்தலில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த திமுக – நாம் தமிழர் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை உண்டாக்கியது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மேனகா நவநீதனை ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், ஈரோடு – வீரப்பன்சத்திரம் பகுதியில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திமுக பணிமனை அருகே சீமான் பிரச்சாரம் மேற்கொண்ட போது, திடீரென இரு கட்சியினரும், கொடி கம்பங்கள், கற்கள், கட்டைகள் என கையில் இருக்கும் பொருட்களை வைத்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஆண்கள்,பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் மீது கற்களை கொண்டு தாக்கியதால் அலறி அடித்துக்கொண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், இவர்களை தடுக்க வந்த போலீசார் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் மோதலை தடுக்க போலீசார் தடியடி நடத்தினர். சீமான் பிரச்சாரப் பொதுக் கூட்டத்திற்கு படையெடுத்து வந்த திமுகவினரை 100க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் விரட்டி அடித்ததால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.

இந்த கலவரம் காரணமாக சீமான் அங்கிருந்து புறப்பட்டதாகவும், அவரின் பிரச்சார வாகனத்தில் செங்கல், கட்டைகள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு நேரடி தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தற்போது அப்பகுதியில் பதற்றமான ஒரு சூழ்நிலையை நிலவி வருவதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!