வாரிசுகள் உருவாகும் அரண்மனைதான் கேவலம்.. பயிற்சி பட்டறையாக இருப்பது நல்லது தான் : கம்யூனிஸ்ட் எம்பி சு. வெங்கடேசனுக்கு ஆளுநர் தமிழிசை சுளீர்!!

Author: Babu Lakshmanan
22 February 2023, 8:51 pm
Quick Share

நான்கு மாநிலங்களில் தமிழர்கள் முதல் குடிமகன்களாகவோ, குடிமகள்களாகவோ இருப்பது தமிழர்களுக்கு பெருமையா..? இல்லையா? என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலைய ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்தியாவை சிதைத்த கார்ல் மார்க்ஸின் சிந்தனை தற்போது புறந்தள்ளப்பட்டுள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளது குறித்த கேள்விக்கு: ஆளுநர் ரவியின் கருத்துக்களை அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள், எனக் கூறினார்.

தமிழக மக்கள் எங்களது திறமைகளை அடையாளம் கண்டு கொள்ளவில்லை என அவர் கூறியது குறித்த கேள்விக்கு: தமிழக மக்களை நான் ஒன்றும் சொல்லவில்லை. பத்திரிக்கையாளர் ஒருவர் ஆளுநராக வருகிறார்கள், மத்திய அமைச்சர்களாக யாரும் வருவதில்லை என கேட்டார். அந்தக் கேள்விக்கு நான் சொன்ன பதிலை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.

ஏன் மத்திய அமைச்சராக ஆக்கவில்லை என்றால் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வாகி இருந்தால் மத்திய அமைச்சராக ஆகியிருப்போம். ஆனால் எங்களுடைய திறமைகளை வீணடிக்க வேண்டாம் என்பதற்காக ஆளுநராக ஆக்கியுள்ளனர் என்று தான் சொன்னேன். தமிழக மக்கள் எங்களுக்கு ஆதரவு தரவில்லையே என்றுதான் சொன்னேனே தவிர பத்திரிக்கையில் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

நாங்கள் என்றும் தமிழக மக்கள் மீது பாசம் உள்ளவர்களாக தான் உள்ளோம். ஆனால் சு.வெங்கடேசன் என்ன சொல்கிறார் என்றால் ஜெயிக்க முடியாதவர்களின் டுடோரியல் கல்லூரியாக ராஜ் பவன் உள்ளது என்கிறார். அதற்கு தான் எதிர்வினை ஆற்றினேன். டுடோரியல் காலேஜில் படித்துக் கூட வெற்றி பெறலாம். வெற்றி பெற்றவர்கள் எல்லாம் மீண்டும் வெற்றி பெறப் போகிறார்களா என்பது தெரியாது. தோல்வி அடைந்தவர்கள் எல்லாம் மீண்டும் வெற்றியடைய வாய்ப்பு உள்ளது.

தேர்தல் வெற்றி மட்டுமே அங்கீகாரம் கிடையாது என்று சொல்லி இருந்தேன். அதற்கு தோல்வி அடைந்தவர்களுக்கெல்லாம் பாஸ் போடுகிறாரா என்று சு.வெங்கடேசன் கேள்வி எழுப்புகிறார். எல்லாருக்கும் எல்லா தகுதியும் உண்டு. மறுபடியும் எல்லாரும் மீண்டும் நிரூபிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. சொன்னதுடைய அர்த்தத்தை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும்.

பாஜக ஆளுநருக்கு பயிற்சி பட்டரையாக உள்ளது என தம்பி ஒருவர் கூறியுள்ளார். வாரிசுகள் உருவாகும் அரண்மனையாக இல்லாமல் அடிப்படை பயிற்சி பட்டரையாக இருந்தால் நல்லது தான். சாதாரணமாக வாய்ப்பு இல்லை என்றால் ஆளுநர் ஆக்கப்படுகிறார்கள் என கூறுகின்றனர். நான்கு மாநிலங்களில் தமிழர்கள் முதல் குடிமகன் மகள்களாக இருப்பது தமிழர்களுக்கு பெருமையா இல்லையா..?

தமிழர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கவில்லை என்று சொல்கிறார்கள். கொடுத்தால், நீங்கள் எல்லாம் பெயிலானவர்கள் உங்களுக்கு என்ன தகுதி உள்ளது என கூறுகின்றனர். பாரத பிரதமர் இந்த பெருமையை நமக்கு கொடுத்துள்ளனர். பெருமையை நீங்கள் சிறுமை என நினைத்தீர்கள் என்றால், நீங்கள் என்ன வேணாலும் சொல்லிக் கொள்ளுங்கள். நாங்கள் பாதிக்கப்பட போவதில்லை.

தேர்தல் வெற்றி மட்டுமே அங்கீகாரம் கிடையாது. மிகப்பெரிய தலைவர்கள் கூட தேர்தலில் தோல்வியுற்று இருக்கிறார்கள். அதனால் அவர்கள் பெரிய தலைவர்கள் இல்லை, மக்கள் சேவை ஆற்றவில்லை என சொல்ல முடியாது. எங்களுடைய ஆதங்கம் தமிழக மக்கள் எங்களை அடையாளம் கண்டு இருந்தால் தெலுங்கானாவில் செய்யும் சேவையை, புதுச்சேரியில் செய்யும் சேவையை தமிழகத்தில் செய்து இருந்திருப்போம்.

சு.வெங்கடேசன் மற்றவர்கள் தகுதியை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள், மற்றவர்களின் வார்த்தையை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். எல்லாம் எனக்கு தான் தெரியும் என்று யாரும் நினைக்க கூடாது, என்றார்.

Views: - 344

0

0