கட்டுக்குள் வரும் கொரோனா .. கையை மீறிப் போன உயிரிழப்பு… இன்றைய தமிழக பாதிப்பு நிலவரம் தெரியுமா..?

Author: Babu Lakshmanan
2 February 2022, 8:19 pm

சென்னை : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 14,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 14,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.

ஒரே நாளில் 24,576 பேர் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,77,999 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தமிழகத்தில் ஒரேநாளில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 37,636 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 15 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 22 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 2054 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 1696 பேருக்கும், செங்கல்பட்டில் 1198 பேருக்கும், திருப்பூரில் 1159 பேருக்கும், சேலத்தில் 716 பேருக்கும், ஈரோட்டில் 813 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • why police did not arrested virat kohli for 11 death in rcb celebration அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்