பழவேற்காட்டில் பெட்ரோல்குண்டு வீச்சு..? வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் எரிந்து நாசம்… போலீசார் விசாரணை!!

Author: Babu Lakshmanan
1 December 2022, 8:44 am

திருவள்ளூர் ; பழவேற்காட்டில் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் கார் தீப்பற்றி எரிந்து நாசமாகியது தொடர்பாக, சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பெரிய தெருவில் வசிப்பவர் மகிமை ராஜ்.. இவரது வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென வீட்டின் வெளியே பயங்கர சத்தத்துடன் அவருடைய இருசக்கர வாகனம் எரிந்து கொண்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தீ பரவியதில் அருகில் இருந்த காரும் தீப்பற்றி கொண்டு எரிந்தது. இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர், மகிமைராஜ் வீட்டின் அருகே வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீயை அணைத்தனர். இதுகுறித்து திருப்பாலைவனம் காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது.

தகவலின் பெயரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தீப்பற்றி எரிந்த வாகனங்கள் அருகே பீர் பாட்டில் போன்ற கண்ணாடி துகள்கள் இருப்பதால், பெட்ரோல் குண்டு மூலம் தாக்குதல் நடைபெற்றதா..? முன்விரோதம் காரணமாக இதை செய்தனரா..? என்ற கோணத்தில் சிசிடிவி கேமரா பதிவை சோதனை செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

  • gautham menon and yashika aannand spotted in beach in dd next level trailer பிரபல நடிகையுடன் கடற்கரையில் உல்லாசம்? கையும் களவுமாக மாட்டிய கௌதம் மேனன்!