வீட்டில் தனியாக இருந்த ஆசிரியை கழுத்தை நெரித்துக்கொலை : கையும் களவுமாக சிக்கிய உறவுக்கார இளைஞர்… போலீசார் விசாரணை!!

Author: Babu Lakshmanan
11 May 2023, 8:53 am
Quick Share

திருச்செந்தூர் அருகிலுள்ள உடன்குடியில் பணத்திற்காக ஆசிரியை கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாடு பகுதியை சேர்ந்தவர் ஆசிரியரான மெட்டில்டா. இவர் உடன்குடி பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை இவரது வீட்டில் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அருகில் உள்ளவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது மெட்டில்டா இறந்த நிலையில் கிடந்துள்ளார் .

இதனை தொடர்ந்து, அவர் வீட்டு மாடியில் நின்று கொண்டிருந்த கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த தீபக் என்பவரை போலீசார் கைது செய்தனர். உறவுக்காரரான தீபக் ஆசிரியரிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. தனியாக இருந்த ஆசிரியை பணம், நகைக்காக கொலை செய்யப்பட்டாரா..? அல்லது வேறு காரணமா? என பல்வேறு கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து உடலை கைப்பற்றி குலசேகரப்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் உடன்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Views: - 299

0

0