திருட்டுத்தனமாக மின் வேலி அமைத்த போது சோகம் : காட்டுப் பன்றிக்காக வைத்த வேலியில் சிக்கி இளைஞர் பலி!!!

Author: Udayachandran RadhaKrishnan
12 May 2023, 11:52 am
Youth Dead - Updatenews360
Quick Share

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ள சூடானுர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி முனிராஜ் என்பவரின் மகன் நவீன் வயது 30.

இவர் சூடானூரில் உள்ள தனது நெல் வயலில் இரவு நேரங்களில் காட்டு பன்றி புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வந்ததால், நேற்றிரவு காட்டு பன்றிகளை கொல்ல நெல்வயலை சுற்றி திருட்டுதனமாக மின்வேலி அமைத்துள்ளார்.

அப்போது எதிர்பாரத விதமாக மின்வேலியில் சிக்கி நவீன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இன்று காலை அவ்வழியாக சென்றவர்கள் நவீன் மின் வேலியில் சிக்கி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து பஞ்சப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மின்சாரத்தை துண்டித்து உடலை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 315

0

0