ED ரெய்டை முறியடித்த கேடியே வருக வருக… கோவை நகர் முழுவதும் வலம் வரும் போஸ்டரால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
25 December 2023, 5:14 pm
Viral Poster
Quick Share

ED ரெய்டை முறியடித்த கேடியே வருக வருக… கோவை நகர் முழுவதும் வலம் வரும் போஸ்டரால் பரபரப்பு!!

கோவை மாவட்டத்தில் கனிமப் பொருள்கள் எடுப்பது சப்ளை செய்வது போன்றவற்றில் புரோக்கர்கள் தலையீடு அதிகமாய் விட்டது.

அமைச்சர் ஆளு என சொல்லி சிலர் கோவை மாவட்டத்தில் கல்குவாரிகள் , கிரஷர் , டிப்பர் லாரிகள் , ஜேசிபி போன்றவற்றில் வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

ராயல்டி ஸ்லிப் , ஜல்லி, எம் சாண்ட் கிராவல் மண் எடுப்பது என அனைத்தும் இந்த அதிகார புரோக்கர்களின் கட்டுப்பாட்டில் போய்விட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் டிப்பர் மற்றும் ஜேசிபி உரிமையாளர்கள் சார்பில் புகார் மனு தரப்பட்டது.

இதில் அதிகார புரோக்கர்கள் பெயர்கள் மற்றும் அவர்கள் வாங்கும் லஞ்ச தொகை குறிப்பிட்டு பகிரங்கமாக புகார் மனு தரப்பட்டது.

இந்த நிலையில் கோவை நகர் முழுவதும் ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அதில், ED ரெய்டை முறியடித்த கேடி கரிகாலன் அவர்களே வருக வருக என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இப்படிக்கு தங்களால் பாதிப்புக்கு உள்ளாக காத்திருக்கும் கல்குவாரி உரிமையாளர்கள் மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் என அச்சிடப்பட்டுள்ளது.

கரிகாலன் புகைப்படத்தை தொடர்ந்து அவருடைய போர்ப்படை தளபதி கோவிந்தராஜ் என்பவரின் புகைப்படத்தை வைத்து சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

கோவை நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சுவரொட்டியை பிரபல அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 362

0

0