‘எட்டி உதைச்சதுல கரு கலைந்திடுச்சு’… நடன பெண்களை மிரட்டி கட்சிக்காரர்களுக்கு சப்ளை ; திமுக பிரமுகர் மீது இளம்பெண் புகார்..!!

Author: Babu Lakshmanan
22 March 2024, 11:58 am
Quick Share

நடனம் ஆடுவதாக அழைத்து வந்து கரூரில் இளம்பெண் நடன கலைஞரை விபச்சாரத்திற்கு தள்ளுவதற்காக திமுக பிரமுகர் சித்திரவதை செய்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்தப் பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி என்பவரது மகள் நந்தினி (பெயர் மாற்றம்) 21 வயதான இவர் கடந்த ஐந்து வருடங்களாக மேடை நடன கலைஞராக இருந்து வருகிறார். நடனம் ஆடுவதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வந்து கொண்டிருந்தார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கரூர் தொழில் பேட்டை பகுதியை சேர்ந்த திமுகவைச் சார்ந்த மதி என்பவர் தனது நடன குழுவிற்காக நந்தினியை அழைத்து வந்துள்ளார்.

திமுகவைச் சார்ந்த மதி என்பவர் கரூர் மாநகராட்சி பகுதியில் உள்ள தொழில்பேட்டை என்ற இடத்தில் அலுவலகமும், வீடும் எடுத்து தங்கியுள்ளார். கரூர் வந்த நந்தினி, மதியிடம் கார் டிரைவராக வேலை பார்த்து வந்த நிலேஸ் என்பவரை காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இது மதிக்குப் பிடிக்கவில்லை.
இதனால், நந்தினி மற்றும் நிலேஷ் இருவரும் வேறு மாவட்டத்திற்கு சென்று தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், பிரிந்திருந்த அவர்களை கடந்த மார்ச்17ஆம் தேதி மதி அங்கு வந்து நந்தினியிடம் அன்பாக பேசி, மீண்டும் கணவன் மனைவி இருவரையும் கரூர் அழைத்து வந்துள்ளார். கரூர் வந்த பிறகு கணவன் மனைவி இருவரையும் வெவ்வேறு இடங்களில் தனி தனியாக அடைத்து வைத்து, இதுவரையும் தனித்தனியாக சித்ரவதை செய்துள்ளார்.

மேலும், நந்தினி நகைகளை திருடி விட்டதாக கூறி தனி இடத்தில் அடைத்து வைத்து அவரின் துணிகளை உருவி நிர்வாணப்படுத்தி அதனை வீடியோ எடுத்து அடித்து மிரட்டி உள்ளார். மதியும் அவருடன் உடனிருந்து சிலரும் நந்தினியை சொல்ல முடியாத அளவிற்கு அடித்து காயப்படுத்தி உள்ளனர். தொடர்ந்து, மூன்று நாட்களாக தனி அறையில் அடைத்து வைத்து அடித்து உதைத்துள்ளார் மதி. மேலும், கர்ப்பிணியாக உள்ள நந்தினியின் வயிற்றில் எட்டி வைத்ததில் கரு கலைந்த நிலையில், இரத்தப்போக்கு ஏற்பட்டு மயங்கி நிலையில், அங்கேயே படுத்து கிடந்துள்ளார்.

இதனை அங்கிருந்த மற்றொரு நடன கலைஞரான ஒரு பெண்மணி, இதை சகித்துக் கொள்ள முடியாமல் ரகசியமாக நந்தினியின் தாயாரை தொடர்பு கொண்டு, உங்கள் மகளை அழைத்துச் சென்று விடுங்கள் என்றும், இங்கு அடித்து கொன்று விடுவார்கள் என தகவல் தெரிவித்துள்ளார்.

நந்தினியின் தாயார் தனலட்சுமி கரூர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், தொழில் பேட்டையில் உள்ள மதியின் நடன கலைஞர்கள் பயிற்சி இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நந்தினியையும், அவரது கணவரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதித்தனர்.

பாதிக்கப்பட்ட நந்தினி, கூறுகையில், “தான் காதலித்து திருமணம் செய்தது மதிக்கு பிடிக்கவில்லை. நான் மதியிடம் இஷ்டம் போல் இருக்க வேண்டும். அவர் சொல்லும் இடங்களுக்கு எல்லாம் நான் செல்ல வேண்டும் என நினைத்தார். அதற்கு நான் மறுத்ததால் அவரின் வீட்டில் நகை திருட்டி விட்டதாக பழி சுமத்தி என்னை சித்திரவதை செய்தார்.

வாயில் சொல்ல முடியாத அளவிற்கு என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். என்னை போன்ற பல பெண்களை நடனம் ஆடுவதற்காக அழைத்து வந்து அறைகளில் பூட்டி வைத்து சித்திரவதை செய்து வருகிறார். அவரை கைது செய்து அந்த பெண்களை மீட்க வேண்டும். எனக்கு நிகழ்ந்தது போல் எந்த பெண்ணிற்கும் இந்த சூழ்நிலை நடக்கக் கூடாது,” என தெரிவித்தார்.

நந்தினியின் உறவினர்கள் கூறுகையில், “மதி தனது சொந்தக்காரில் திமுக கொடியை கட்டிக்கொண்டு, தான் திமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ளதாகவும், தனக்கு திமுகவின் பெரிய தலைவர்களுடன் நெருங்கிய நட்பு உள்ளதாகவும் கூறி கொண்டு கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல், தனது கட்சிக்காரர்களுக்கு நடன பெண்களை அனுப்பி வைப்பது போன்ற விஷயங்களை செய்து வருவதாக தெரிவித்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து டான்ஸ் மாஸ்டர் மதி மற்றும் பிரவீன், ப்ரீத்தி ஆகியோர் மீது பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் நேரத்தில் கட்சிக்காரர்களுக்கு நடன பெண்களை மிரட்டி உல்லாசத்திற்கு அனுப்பி வைப்பதாக திமுக பிரமுகர் கைதான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Views: - 151

0

0