கிராமத்தையே நடுநடுங்கச் செய்த கொலை… இளைஞரின் தலையை துண்டாக்கிய சாலையில் வீசிய கொடூரம் ; நள்ளிரவில் பயங்கரம்

Author: Babu Lakshmanan
2 December 2023, 11:45 am

பொன்னேரி அருகே இளைஞரின் கைகளைப் பின்புறம் கட்டி இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து தலையை வெட்டி துண்டாக்கி சாலையில் வீசிவிட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே மெதூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே இரவு நேரத்தில் கடைகள் அடைக்கப்பட்ட பகுதியில் இளைஞர் ஒருவரின் கைகளை கட்டி, தலையை தனியாக துண்டித்து கொடூரக் கொலை செய்துள்ளனர். இந்த செயலை செய்த கும்பல், இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தக் கொலை சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த பொன்னேரி காவல்துறையினர், தலை தனியாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட இளைஞர் உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் மவுத்தம்பேடு கிராமத்தைச் சேர்ந்த ராகேஷ் (25) என்பதும், இவரை கொலை செய்தது யார்..? எதற்காக கொலை செய்தனர்..? முன் விரோதம் காரணமாக கொலை செய்தனரா..?என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு தப்பியோடிய கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்டு உயிரிழந்த ராகேஷ் மீது மீஞ்சூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ள நிலையில் இவரை முன் விரோதம் காரணமாக கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை நடந்த பகுதி இருட்டான இடம் என்பதாலும் அருகில் கண்காணிப்பு கேமராக்கள் ஏதும் இல்லாததால் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார்..? எத்தனை பேர்..? என்பது குறித்தும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!