அறிஞர் அண்ணாவின் 52வது நினைவு நாள்: முதலமைச்சர் பழனிசாமி நினைவஞ்சலி…!!
3 February 2021, 8:27 amQuick Share
சென்னை: தாய்த்தமிழின் மீது அளவற்ற பற்றும், தீராக்காதலும் கொண்ட தமிழன்னையின் தலைமகன் அண்ணா என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
அறிஞர் அண்ணாவின் 52வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் நினைவஞ்சலி பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,
தாய்த்தமிழின் மீது அளவற்ற பற்றும், தீராக்காதலும் கொண்ட தமிழன்னையின் தலைமகன். நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு எனும் பெயரை சட்டப்பூர்வமாக்கி, இரு மொழிக்கொள்கையே தமிழகத்தில் தொடரும் என வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த சிறந்த மனிதநேய பண்பாளரின் நினைவு நாளில் அவரை நினைவுகூர்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
Views: - 0
0
0