பிரதமர் முதல் பாஜக தொண்டர் வரை இதே வேலைதான்… மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்..!!

Author: Babu Lakshmanan
19 March 2024, 8:52 pm
Quick Share

பெங்களூரூ குண்டுவெடிப்பு குறித்து மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கருத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பெங்களூரூவில் பிரபலமான ராமேஸ்வரம் கஃபே எனும் உணவகத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படாத நிலையில், 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபரின் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து குற்றவாளியை தேடி வருகின்றனர். மேலும், துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானமும் அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளியை பிடிப்பதற்கான முயற்சியில் என்ஐஏ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் பயங்கரவாத பயிற்சி பெற்று வந்த நபரே, பெங்களூரூவில் உள்ள கஃபேவில் குண்டு வைத்ததாக மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கூறியிருந்தார். அவரது இந்தப் பேச்சுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள X தளப்பதிவில், ” பெங்களூரூ குண்டுவெடிப்பு குறித்து மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கருத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பாஜகவின் இந்த பிளவுபடுத்தும் பேச்சை தமிழர்களும், கன்னடர்களும் மறுப்பார்கள். அமைதி, நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய ஷோபா மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாஜகவில் பிரதமர் முதல் அடிமட்ட தொண்டர் வரை பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும், எனக் கூறினார்.

Views: - 86

0

0