சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை ; தந்தையின் பிடிவாதத்தால் மகளின் விபரீத முடிவு.. விசாரணையில் அதிர்ச்சி!!

Author: Babu Lakshmanan
27 April 2023, 4:44 pm
Quick Share

சென்னையில் கட்டாயப்படுத்தி மருத்துவ கல்லூரி படிக்க வைத்ததால் மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை போரூர் கார்டனில் வசித்து வந்தவர் காசிநாதன். இவர் மாங்காட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியான முத்துக்குமாரன் மருத்துவக் கல்லூரியில் டீன் ஆக பணியாற்றியுள்ளார். இவரது மனைவி செல்வி இவரும் மருத்துவராக உள்ளார் இவர்களுக்கு ஷைலா என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

இதில் சைலா முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை வீட்டில் துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

லைலாவை கட்டாயப்படுத்தி மருத்துவம் படிக்க வைத்து வந்ததால் மன உளைச்சலில் இருந்த ஷைலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 395

0

0