கோவையில் தீவிரவாத பயிற்சி…? தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை!!

Author: Babu Lakshmanan
16 September 2023, 8:25 am
Quick Share

கோவையில் தீவிரவாத செயலுக்கான பயிற்சி அளிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர். உக்கடம் கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாகவும், கோவையில் உள்ள அரபிக் கல்லூரியில் தீவிரவாத செயலுக்கான பயிற்சி அளிக்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில், சந்தேகப்படும் 21க்கும் மேற்பட்ட நபர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை ஜி.எம் நகர் அபுதாஹீர், குனியமுத்தூர் பகுதியில் சோகைல், கரும்பு கடைப்பிலுள்ள மன்சூர் ஆகியோரின் வீடுகளிலும் மற்றும் உக்கடம் உள்ளிட்ட நான்கு பகுதிகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஜி.எம்.நகர் திமுக பிரமுகர் தமிமூன் அன்சாரி என்பவர் வீட்டிலும், கோவை மாநகராட்சி 82வது கவுன்சிலர் முபசீரா வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதிகாரிகளை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்ததால் வாக்குவாதம் நடைபெற்றது.

இதேபோல், சென்னையில் 3 இடங்களில் சோதனை என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருவிக நகரில் உள்ள முஜ்பீர் ரகுமான் என்பவரின் வீட்டிலும், நீலாங்கரையில் பிஸ்மில்லா தெருவில் உள்ள புகாரி என்பவரது வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Views: - 239

0

0