கார் கொடுத்து அரசியல் செய்கிறார்கள்… திமுக ஆட்சியில் இதெல்லாம் சாதாரணம் தான் : பிரேமலதா விஜயகாந்த் காட்டம்..!!

Author: Babu Lakshmanan
27 June 2023, 8:35 am
Quick Share

பெண் ஓட்டுனர் ஆவது இது முதல்முறை அல்ல என்றும், அதை அரசியல் ஆக்குவதாக தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வேலூர் மாநகரில் இரண்டு இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் விருப்பாச்சிபுரத்தைச் சேர்ந்த மறைந்த முன்னாள் தேமுதிக மாவட்ட செயலாளர் வி.பி.வேலு அவர்களின் இல்லத்திற்கு சென்று அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பின்னர் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து நிதி உதவியை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்திடம், வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் பதிலளித்ததாவது :- நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டு உள்ளது. தேமுதிக நிச்சயமாக ஆறு மாத காலத்திற்கு முன்பே தனது நிலைப்பாடு என்ன என்பது குறித்து கேப்டன் அறிவிப்பார், என்றார்.

மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் நீங்களோ அல்லது உங்கள் மகனோ போட்டியிட வாய்ப்புள்ளதா என கேட்டதற்கு, ‘பலமுறை எங்கள் கட்சி சார்பில் பல பேர் போட்டியிட்டு உள்ளனர். அந்த மாதிரி நிச்சயமாக இந்த முறையும் தேமுதிக சார்பாக போட்டியிடுவார்கள். யார் போட்டியிட போகிறார்கள், எந்த தொகுதி என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தலைமை கழகத்தின் மூலமாக அறிவிப்பார்,’ என கூறினார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேட்டதற்கு, “கள்ளச்சாராயம் தமிழகத்தில் கரைபுரண்டு ஓடுகிறது. இதுவரையில் எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு கள்ளச்சாராயத்தினால் மரணங்கள். அதுமட்டுமில்லாமல் சாலைகளில் பட்டப்பகலில் வெட்டி படுகொலைகள் நடைபெறுகின்றன. எல்லா ஊர்களிலும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதேபோல், பெண்கள் தைரியமாக வெளியே செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. பாலியல் வன்கொடுமை நடைபெறுகின்றது. காரணம் என்னவென்றால் எல்லா இடங்களிலும் டாஸ்மாக் கடைகள் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் மது அதிகமாகியுள்ளது. போதை அதிகமாகியுள்ளது. கஞ்சா ஒருபுறம், இவையெல்லாம் இருப்பதினால் சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் மிகப்பெரிய ஒரு கேள்விக்குறியாக சென்று கொண்டுள்ளது. பெட்ரோல் குண்டு வீச்சு, ரவுடிசம் எல்லாமே தமிழகத்தில் உள்ளது

திருநெல்வேலியில் அருகே ஒரு நாளைக்கு ஆயிரம் லோடு மணல் கன்னியாகுமரிக்கு கடத்துகின்றனர். ஆலங்குளம் என்ற ஊரில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறோம் என அறிவித்த பிறகு, அன்றைய தினம் அந்த மணல் குவாரிக்கு சென்று பார்வையிட போவதாக கூறியதை அடுத்து போலீசை குவித்து வைத்துள்ளனர். சட்டம் ஒழுங்கு ஒரு பெரிய கேள்விக்குறியாக உள்ளது, என்றார்.

செந்தில் பாலாஜியின் வீட்டிற்கு ரெய்டு வருகின்றனர் ஏன் முன்கூட்டி அறிவித்து வரவில்லை போலீஸ் பாதுகாப்பு கொடுப்போம் என்கின்றனர். எந்த ஊரில் ரெய்டு வருபவர்கள் அறிவித்து விட்டு வருகின்றனர். புதிய விளக்கத்தை இவர்கள் தான் கொடுக்கின்றனர். கேட்டால் திராவிட மாடல் என்று கூறுகின்றனர். என்ன திராவிட மாடல் செந்தில் பாலாஜி மட்டும் என்ன ஸ்பெஷலா..? இங்கு எல்லாரைப் போல தான் எங்க வீட்டிற்கு கூட தான் ரைட் வந்துள்ளனர். சொல்லாமல் கொள்ளாமல் வருபவர்கள், கேட் எகிறி குடித்து தான் வருவார்கள். அது அவர்களின் கடமை. அவர்களை அடிப்பது, அவர்கள் வண்டிகளை சேதப்படுத்துவது, அதிகாரிகளை அடிப்பதா? அதனால் தான் இன்று இவ்வளவு தூரம் சென்றுள்ளது.

செந்தில் பாலாஜி ஊழல் செய்ததினால் தான் அவர் வீட்டிற்கு ரெய்டு செல்கின்றனர். அவரை உடனடியாக கொண்டு சென்று ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். அரசு மருத்துவமனையின் மீது நம்பிக்கை இல்லையா அரசுக்கு..? காவேரி மருத்துவமனைக்கு ஏன் மாற்றுகிறீர்கள்..? மக்கள் மட்டும் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். மந்திரிகள் தனியார் மருத்துவமனைக்கு போக வேண்டுமா…? அதிலே தரம் எப்படி இருக்கின்றது தெரிகிறது அல்லவா..? இது போன்று தான் தமிழகத்தில் இப்பொழுது உள்ளது.

முதல்வர் வெளிநாடுகளுக்கு பயணம் போகின்றார். கேட்டால் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்கின்றார். எவ்வளவோ லட்சம் கோடிக்கு தொழிற்சாலைகள் வரும் என்கின்றனர். எங்கேயாவது ஒரு தொழிற்சாலையை இரண்டரை ஆண்டுகள் ஆகி திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த மாவட்டத்தில் ஒரு தொழிற்சாலை காண்பியுங்கள்.

மின் கட்டண உயர்வு என நேற்று அறிவிக்கின்றனர். அதில் மத்திய அரசு அறிவித்தபடி என்ற வார்த்தையை சேர்க்கின்றனர். ஏனென்றால், இது இவர்கள் மீது தவறு வராது என்று. இதுவரையில் கடந்த 10 ஆண்டுகளில் எங்கேயாவது மின்வெட்டு நடைபெற்றதா இப்பொழுது எல்லா ஊரிலும் மின்வெட்டு . சென்னை உட்பட 500 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டோம் என கூறுகின்றனர். எங்கேயாவது உதாரணம் காண்பிக்க சொல்லுங்கள் பார்க்கலாம். ஏதோ விற்பனையாகாமல் உள்ளதை மூடி கண்துடைப்பு நாடகம் நடத்துகின்றனர்.

தனது தந்தையின் குடிப்பழக்கத்தை நிறுத்த முடியவில்லை என வேலூரில் தானே மாணவி விஷ்ணு பிரியா இறந்தார். அனிதாவின் மரணத்தை நீட் தேர்வு வைத்து திமுகவினர் சுடுகாடு வரை சென்று அரசியல் ஆக்குகின்றனர்.

கோயம்புத்தூரில் ஒரு பெண் தனியார் பேருந்தை பெண் ஓட்டுகிறார். வாழ்த்துக்கள், பாஜக வானதி சீனிவாசன் அவர்கள் தொகுதி என்பதால் ஒரு பெண் ஓட்டுனர் என்பதால் பார்க்க சென்றார். உடனே அதை ஒரு அரசியல் ஆக்குகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செல்கிறார். பேருந்தில் பயணிக்க டிக்கெட்டுக்கு காசு இல்லாமல் பேருந்தில் ஏறியுள்ளார் அவர். இதே கேப்டன் விஜயகாந்த் ஒரு தடவை பேருந்து கட்டண உயர்வற்காக சென்னையில் தனது வீட்டில் இருந்து பல்லாவரம் வரையில் அரசு பேருந்தில் 50 பேருடன் பயணித்தனர். அனைவருக்கும் கேப்டன் விஜயகாந்த் டிக்கெட் எடுத்தார். அது ஒரு நியாயம் தர்மத்துடன் அரசியல் செய்ய வேண்டும்.

கமலஹாசன் ஷர்மிளாவுக்கு கார் கொடுத்ததும் ஒரு அரசியல் தான். இப்பொழுது தான் முதல் பெண் டிரைவர் தமிழகத்தில் வந்துள்ளார்களா..? என யோசியுங்கள். ஜெயலலிதா காலத்திலேயே பெண் ஓட்டுநரை ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளார். அப்பொழுது ஏன் அரசியல் செய்யவில்லை? அப்பொழுது ஏன் கார் வாங்கி கொடுக்கவில்லை? திமுக ஆட்சி செய்தால் எல்லாமே அரசியல் தான். ஆகையால் இதெல்லாம் கண்துடைப்பு நாடகம் தான்.

ஜெயலலிதாவிற்கு பிறகு ஒரு பெண் முதல்வராவது குறித்து கேட்ட செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். யார் கையிலும் கிடையாது. எல்லாருமே முதலமைச்சர் என்றால், அப்பொழுது முதலமைச்சர் என்ற பதவியே மதிப்பு இல்லாமல் போய்விடும். அதற்கான தகுதி, உழைப்பு, மக்கள் மேல் நாம் வைத்திருக்கும் அன்பு, பாசம், கேப்டன் விஜயகாந்த் போல் 40 ஆண்டுகாலம் உழைத்தவருக்கே மக்கள் வாய்ப்பு கொடுக்கவில்லை. இங்கே அரசியலில் பல விஷயங்கள் உள்ளது. இங்கு ஓட்டிற்கு பணம் கொடுப்பவர்கள், பின்னால் மக்கள் ஓடுகின்றனர்.

நடிகர் விஜயின் அரசியல் பயணம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. படித்தவர்களுக்கு உதவி செய்துள்ளார் நல்ல விஷயம், வாழ்த்துக்கள், எனக் கூறினார்.

Views: - 224

0

0