குப்பைத் தொட்டியில் கிடந்த கை.. கிணற்றில் கிடந்த சடலம் : பரபரப்பை கிளப்பிய கோவை சம்பவத்தில் திடீர் திருப்பம்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2022, 12:03 pm
Murder Well - Updatenews360
Quick Share

கோவை துடியலூரில் அழகு நிலைய ஊழியர் பிரபுவின் துண்டிக்கப்பட்ட கை கிடைத்த வழக்கு – உடல் துடியலூர் சந்தை அருகே உள்ள கிணற்றில் மேலும் உடலில் உறுப்புகள் கண்டறியப்பட்டதுள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன் துடியலூர் வெள்ளகிணறு பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் ஆணின் இடது கை கண்டறியப்பட்டது. மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் 8 தனிப்படை அமைக்கப்பட்டது.

விசாரணையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அழகு நிலைய ஊழியர் பிரபு என்பவரது கை தான் என உறுதியானது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் உடல் எங்கே உள்ளது என்பது குறித்த தகவல் வெளியானது. இதையடுத்து விசாரணை தீவிரபடுத்தப்பட்ட நிலையில் இறந்த பிரபுவின் உடல் பாகங்கள் துடியலூர் சந்தை அருகே உள்ள கிணற்றில் கண்டறியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 341

0

0